states

img

8 மாதங்களில் மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை

     ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவம் உள்ளிட்ட  உயர் கல்வி நிறு வனங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்டதால், இதற்கென தனியாக பயிற்சி மை யங்களுக்கு சென்று படிக்காமல் தேர்ச்சிபெற முடியாது என்ற நிலையை ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட பயிற்சி மையங்கள், பெற்றோரை பணம்காய்ச்சி மர மாக்கி, காசு பார்த்து வருகின்றன.

      நாடு முழுவதும் புற்றிசல் போல, இந்த பயிற்சி மையங்கள் பெருகி இருந்தாலும், இதில், முதலிடம் வகிப்பது, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரமாகும். நீட்,  ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வு களுக்காக ஏராளமான பயிற்சி மை யங்கள் செயல்பட்டு வருகின்றன.

     அவ்வாறு சேர்க்கப்பட்ட மாண வர்கள், நாளொன்றுக்கு 20 மணி நேரம் வரை படிக்க வேண்டும் என்று  பயிற்சி மையங்கள் அளிக்கும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமலும், நீட், ஜேஇஇ தேர்வை எதிர்கொள்ள முடியாமலும் கடுமை யான மன அழுத்தங்களுக்கு உள்ளா கின்றனர். அவர்களில் சிலர் தற் கொலையும் செய்துகொள்கின்ற னர்.

    கோட்டா காவல்துறையின் தரவு களின் படி, நீட் தேர்வால் 2015- ஆம் ஆண்டில் 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள் ளனர். 2016-இல் 16 மாணவர்களும், 2017-இல் 7 பேரும், 2018-ல் 20 பேரும், 2019-இல் 8 பேரும் தற்கொ லை செய்துகொண்டனர். 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொ ரோனா தொற்று பரவல் காரணமாக தற்கொலைகள் சற்று குறைந்து காணப்பட்டன. 2020-இல் 4 மாண வர்கள் மட்டுமே தற்கொலை செய்து கொண்ட நிலையில், 2021-இல் ஒரு வர்கூட தற்கொலை செய்து கொள்ள வில்லை. 2022-இல் இந்த எண்ணிக்கை மீண்டும் 15 ஆக இருந்தது.

     இந்நிலையில், 2023 ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களுக்குள் மட்டும் 24 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 6 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள னர்.  

    மாணவர்கள் இவ்வாறு தூக்கில் தொங்குவதைத் தடுக்க, விடுதி களில் ஸ்பிரிங் பொருத்தப்பட்ட மின்விசிறிகளை நீட், ஜேஇஇ பயிற்சி மையங்கள் பொருத்தின. மாண வர்களைக் கண்காணிக்க பயிற்சி மையங்களில் கவுன்சிலிங் மற்றும் பயோமெட்ரிக் வருகை போன்ற  நடவடிக்கைகளையும் அறிமுகப் படுத்தின. முதல்வர் அசோக் கெலாட், பயிற்சி மையங்களை அழைத்து ஆலோசனையும் நடத்தினார். பல அறிவுரைகளை வழங்கினார்.

     ஆனாலும், ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) அவீஷ்கர் சாம்பாஜி  கஸ்லே மற்றும் ஆதர்ஷ் ராஜ்  ஆகிய மேலும் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர்.