states

மோடி ஆட்சியில் ராணுவத்திலும் 1.55 லட்சம் பணியிடங்கள் காலி!

புதுதில்லி, மார்ச் 28 - 2014 மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்டபோது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கித் தருவேன் என்று கூறித்தான் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், 9 ஆண்டுகளில் சில லட்சம் பேருக்குக் கூட புதிய வேலை வாய்ப்புக் களை உருவாக்கித்தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, ஒருவர் பக்கோடா விற்கும் தொழிலைத் துவங்குகிறார் என்றால், அதுவும் கூட ஒரு வேலைவாய்ப்புத்தான் என்று பிரதமர் மோடி அலட்சியமாக கூறினார். ஒன்றிய அரசுத் துறைகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே, 2021 நிலவரப்படி 78 துறைகளில் சுமார் 9.8 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை ‘ரோஜ்கர் மேளா திட்டத்தின்’ மூலம் நிரப்பப் போவதாக பிரதமர் மோடி கூறினார். அவர் கூறியே ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. இந்நிலையில்தான், இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்புப் படைகளிலும் சுமார்  1.55 லட்சத்திற்கும் அதிகமான பணி யிடங்கள் காலியாக இருப்பதாக மாநி லங்களவையில் ஒன்றிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் கூறி யுள்ளார்.

இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவப் படை மற்றும் ராணுவ பல் மருத்துவப் படை உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடங்கள் 8,129 இடங்கள் காலி யாக உள்ளன. மிலிட்டரி நர்சிங் சர்வீஸில் (MNS) 509 பணியிடங்களும், ஜேசிஓக்கள் மற்றும் பிற பதவிகளுக்கான இடங்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 673 இடங்களும், ராணுவத்தால் பணி யமர்த்தப்படும் சிவிலியன்களில் ‘ஏ’ குழுவில் 252 பணியிடங்களும், ‘பி’ குழுவில் 2,549 காலியிடங்களும், ‘சி’ குழுவில் 35 ஆயிரத்து 368 இடங்களும் காலியாக உள்ளன. கடற்படையில் மொத்தமாக 12,428 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 1,653 அதிகாரிகள், 29 மருத்துவ மற்றும் பல் மருத்துவ அலுவலர்கள் மற்றும்  10,746 மாலுமிகள் இடங்கள் நிரப்பப்பட வேண்டியது உள்ளது. விமானப்படை சிவில் ஊழியர்களில், குரூப் ஏ பிரிவில் 165 பேர், பி பிரிவில் 4207 பேர், குரூப் சியில் 6,156 பேர் பற்றாக் குறையாக உள்ளனர்.   மொத்தமாக 7,031 பணியாளர்கள் பற்றாக்குறை உள் ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.