states

img

திரிபுரா: தேர்தல் முடிவுக்கு பின் 668 தாக்குதல்கள் நடத்திய பாஜக!

திரிபுரா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிபிஎம் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது 668 தாக்குதல்களை பாஜகவினர் நடத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக திரிபுராவில் தேர்தலுக்குப் பிந்தைய பாரதிய ஜனதா கட்சியின் மூர்க்கத்தனமான வன்முறைகள் மாநிலம் எங்கும் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடந்த மார்ச் 2-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, 2 நாட்களில் வீடுகளை அடித்து நொறுக்கியும், தீயிட்டு எரித்தும், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் என 668 தாக்குதல்கள் பாஜக நடத்தியுள்ளது. இந்த நிலையில், திரிபுரா சிபிஎம் மாநில செயலாளர் முதன்மைச் செயலாளரைச் சந்தித்து தாக்குதல்களான ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் மீது பாஜகவினர் தொடுக்கும் மூர்க்கத்தனமான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், திரிபுராவின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், "கடந்த இரு நாட்களாக முயற்சி செய்தும் ஆளுநரை சந்திக்க இயலவில்லை. முதன்மைச் செயலாளரை சந்தித்து 668 தாக்குதல்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திரிபுராவில் பாஜகவால் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த காட்டுமிராண்டித்தனமான தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜகவின் இந்த ஜனநாயகக் கொலைக்கும், பயங்கரவாத அரசியலுக்கும் எதிராக நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப்படும்." என்று தெரிவித்துள்ளார்.