அகர்தலா, பிப். 4 - பிப்ரவரி 16-ஆம் தேதியன்று திரிபுரா சட்டமன்றத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர் தல் பிரச்சாரம் விறுவிறுப்புடன் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி நடத்துகிற பொ துக்கூட்டங்களிலும் பேரணிகளி லும் மக்கள் பெருமளவில் பங்கேற்கி றார்கள். தற்போது அதிகாரத்தில் உள்ள பாஜகவிலிருந்து தினமும் பலர் ராஜினாமா செய்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளில் சேர்வது அதிகரித்து வருகிறது. யுவராஜ்நகர் லஜ்னந்தல் என்ற நகரில் பாஜகவின் ஐந்து தலைவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளில் சேர்ந்தனர். கல்யாண்பூர் சட்டமன்றத் தொகு தியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மனீந்திரா சந்திர தாஸை வெற்றி பெறச்செய்யுமாறு கோரி பெரும் பேரணி நடைபெற்றது. கையில் செங்கொடிகளை ஏந்தியவாறு கட்சியின் தலைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் பெருமளவில் பேரணி யில் பங்கேற்றனர். யுவராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட்டுள்ள இடதுமுன்னணி வேட்பா ளர் ஷைலீந்திர சந்திர தேவ்நாத்தை ஆதரித்து ராம்நகரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் பொது மக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பாணி நகரைச் சேர்ந்த பாஜக தலைவர் கள் நான்கு பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்தனர். பக்மா சட்டமன்றத் தொகுதி இடது முன்னணி வேட்பாளர் நரேஷ் ஜமாதியாவை வெற்றிபெறச் செய்யு மாறு கோரி பித்ரானிஃபோட்டமதி பிராந்தியத்தில் பெரும் ஊர்வலம் நடைபெற்றது. திரிபுராவில் மீண்டும் மக்கள் ஆட்சி மலர்வதற்கு மக்கள் ஒன்றுபட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மானு சட்டமன்றத் தொகுதியில் இடதுமுன்னணி வேட்பாளர் பிரபாத் சௌத்ரியை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டி நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ரைஸபரியா வில் பாஜகவைச் சேர்ந்த எட்டு ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளில் சேர்ந்த னர். ஜனவரி 31 அன்று திரிபுராவின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய பேரணிகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் தோழர்க ளும் கூட்டணிக் கட்சியினரும் மக்க ளும் பங்கேற்றனர்.