சிறப்பு திறன்கள் கொண்ட குழந்தைகள், மாணவர்கள், இளை ஞருக்கான உலக ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடை பெற்று வந்தது. இந்த தொடரில் இந்தியா சார்பில் களமிறங்கிய வீரர் - வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என மொத்தம் 202 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 3 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 44 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 44 காவலர்கள் சோதனைச் சாவடி பிரிவில் இருந்து காவல் நிலையத்துக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் அல்லம்பட்டி செந்தில் குமார் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள ரவுடி வரிச்சூர் செல்வத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ரூ.50,000 மதிப்புள்ள 600 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றப் பட்டு அழிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உடல் முழுவதும் காயங் களுடன் சுற்றி திரியும் “பாகுபலி” யானை வழக்கமான உணவை எடுக்கிறது எனவும், முழு ஆரோக்கியமான நிலை யில் யானை உலாவுவ தாகவும் கோவை வனக் கோட்ட மருத்துவர் கூறி யுள்ளார். காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வனத் துறை “பாகுபலி” யானை யை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வரும் நிலையில், வனத் துறைக்கு தொடர்ந்து போக்கு காட்டிவருகிறது.
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஆசனூரில் புகுந்த காட்டு யானை பொது மக்கள் மற்றும் கால்நடை களை துரத்தியதால் அப்பகுதி மக்கள் வீடு களுக்குள் முடங்கி உள்ளனர்.
உலகச் செய்திகள்
ஹைட்ரஜனைக் கொண்டு இயங்கும் பெரிய விமானத்தை உருவாக்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்த விமானம் பயன்பாட்டுக்கு வருகையில் நியூயார்க் நகரில் இருந்து பாரிஸ் நகருக்கு வெறும் ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். கடைசியாக படு வேகத்தில் கான்கார்டு விமானம் பயணித்தது. இந்த ஹைட்ரஜன் விமானம் அந்த வேகத்தை முறியடிக்கும் சாதனையைச் செய்யவிருக்கிறது.
பொருளாதாரம், மருத்துவம், உடல் நலன் மற்றும் ஊடகப்பிரிவு ஆகிய துறைகளில் இருதரப்பு உடன்பாடுகளில் சீனாவும், பார்படாசும் கையெழுத்திட்டுள்ளன. அதிகாரப்பூர்வ பயணமாக சீனா வந்துள்ள பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி, சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்து இந்தத் துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பார்படாசில் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்வது உள்ளிட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன.
சுற்றுச்சூழல் போராளிகளின் தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்தது உண்மைதான் என்று ஜெர்மனியின் விசாரணை அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வரும் குழு, “நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டே போராட்டங்களை நடத்துகிறோம். எங்கள் பெயர்கள், முகங்கள், திட்டங்கள் என்று அனைத்தையும் வெளிப்படையாக வைக்கிறோம். அதனால் ஏற்படும் சட்ட விளைவுகளை ஏற்றுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளது. ஆனால் சட்டவிரோதமாக எங்கள் தொலை பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ளார்கள்.