சென்னை, மார்ச் 21- மனுவாதிகள் அவதூறு தாக்கு தல் தொடுத்துள்ள நிலையில், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ் ணாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி துணை நிற்பதாகவும், ஏனைய ஜனநாயக சக்திகளும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்ப முன்வர வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் வேண்டு கோள் விடுத்துள்ளார். “கர்நாடக இசையை உழைக் கும் மக்களிடம் கொண்டு சென்ற அற்புதமான கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு சென்னை சங்கீத அகாடமி, சங்கீத கலாநிதி விருது (2024) வழங்கியிருப்பது மிக வும் பொருத்தமானது; பாராட்டுக் குரியது” என்று கூறியிருக்கும் கே. பாலகிருஷ்ணன், “டி.எம்.கிருஷ்ணாவுக்கு, தனது வாழ்த்துக் களை உரித்தாக்கிக் கொள்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது: “சாதிய, வகுப்புவாத பாகுபாடு கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக- அவரது (டி.எம்.கிருஷ்ணா) குரல் மற்றும் எழுத்து ஓங்கி ஒலித்து வந்திருக்கிறது. கர் நாடக இசைத் துறையில் பிரா மணிய ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை அவர் கண்டிக்கத் தவ றியதே இல்லை. அனைவருக்கு மான இசையாக, குறிப்பாக அடித் தட்டு மக்களை சென்றடையும் இசையாக அதை மாற்றுவதற்குத் தொடர் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். மேலும் “மீ டூ” இயக்கம் முன்னுக்கு வந்த போது, சில இசை கலைஞர்களின் பாலி யல் தவறுகளை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் அவர் நின்றிருக்கிறார். இத்தகைய அவ ரது சமூக நிலைபாடுகள் சங்பரிவா ரம் மற்றும் வேறு சிலர் மத்தியில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியி ருக்கிறது. சங்பரிவாரத்தின் ஏரா ளமான அச்சுறுத்தல்களை அவர் கடந்த காலத்தில் எதிர் கொண்டுள்ளார்.
தற்போது டி.எம். கிருஷ்ணா அவர்களின் தலைமையில் நடக்க உள்ள சென்னை சங்கீத அகாடமி யின் வருடாந்திர மாநாட்டைப் புறக்கணிப்பதாக சில கலைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதி விட்டுள்ளனர். கர்நாடக சங்கீத உலகத்தையே அவர் கேவலப் படுத்தி விட்டதாகவும், பெரியாரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதாகவும் காரணங்களைக் கூறி பல அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகாடமி அதற்கு இரையாகாமல், எடுத்த நிலைபாட்டில் உறுதியாக நின்று பதில் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. எதிர்நிலைக் கருத்துக்களை, விமர்சனங்களை அடக்கி ஒடுக்கு வதையே வாடிக்கையாக கொண்ட ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியில் இதுபோன்ற தாக்குதல்கள் திட்ட மிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. உயர்சாதிய, ஆணாதிக்க, மனு வாத சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் ஆட்சி அதிகாரத் தில் இருக்கும் வரை வேறு எதை எதிர்பார்க்க முடியும்? டி.எம். கிருஷ்ணா அவர்கள் உறுதியோடும் துணிச்சலோடும் இதனை நிச்சயம் எதிர்கொள்வார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அவரோடு துணை நிற்கும். ஜனநாயக சக்திகள் அவ ருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கே. பால கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.