6 யூடியூப் சேனல்களை முடக்கி ஒன்றிய அரசு நடவடிக்கை
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மையை கண்டறியும் பிரிவு, நடத்திய ஆய்வில் 6 யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைந்து தவறான தகவல்களை பரப்பியதை கண்டுபிடித்துள்ளது. நேஷன் டிவி, சம்வாட் டிவி, சரோகர் பாரத், நேஷன் -24, ஸ்வர்னிம் பாரத், சம்வாட் சமாச்சார் ஆகியவையே அந்த யூடியூப் சேனல்கள் ஆகும். இந்த சேனல்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குத் தடை, குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெயரில் போலி அறிக்கைகள் என பல தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம்!
கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பி.எம். சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து எம்.பி. முகமது பைசல் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவரட்டி மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம், எம்.பி. முகமது பைசல் உள்ளிட்ட 4 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இதையடுத்து, லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரவி விவகாரத்தை உள்துறைக்கு அனுப்பி வைத்த குடியரசுத் தலைவர்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த கடிதத்தை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுப்பி வைத்திருப்பதாகவும், கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் முர்மு, தமிழ்நாடு முதல்வரின் கடிதத்தைப் பரிந்துரை செய்திருப்பதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு எதிராக ஜன.27 முதல் காயத்ரி ரகுராம் நடைபயணம்
சென்னை, ஜன.14- பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத பாஜகவை கண்டித்து ஜனவரி 27 முதல் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதனால் மாநில பாஜக தலைமை மற்றும் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தி யதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியா குமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனி யாக இருந்தாலோ அல்லது யார் வேண்டு மானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சு றுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவ ருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைபயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண் களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண் களுக்கும் ஆகும். பாஜகவின் உண்மையான முகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தேன், பாஜக வின் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றி. வளர்ப்பு மகனுக்கு இங்கு அதிகாரம் அதிகம், பாஜகவில் வாரிசு அரசியல் உள் ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பாஜகவிடம் தர்மம் இல்லை. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து மூன்று இளைஞர்கள் படுகாயம்
விருதுநகர்,ஜன.14- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட வெடி விபத்தில் வட மாநில மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குபட்டி கிராமத்தில் கீழச் செல்லையாபுரத்தைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்கு சொந்தமான ஏவிஎம் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. டிஆர்ஓ உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் 15 அறைகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடிமருந்துகள் ஊராய்வினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்பால் ஆஜி (25), சந்தீப் குமார்(24), வினோத் ராம்பால் (25) மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சனாதனத்திற்கு இடமில்லை: தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
சென்னை,ஜன.14- தைத் திருநாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரி வித்துள்ளனர். முத்தரசன் தனது வாழ்த்து செய்தியில், “மனித சமூகத்தை பிளவுபடுத்திய நால்வர்ண முறையும், இதனை ஆதாரப்படுத்தி கட்டமைக்கப்பட்ட சாதிய அடுக்குமுறையும் நியாயப் படுத்தப்படுகின்றது. சவால்களை சந் தித்து வென்று வாழும் தமிழர் வாழ்வில் சனாதனத்துக்கு இடமில்லை என்று வெற்றி முழக்கமிடும் பொங்கலாக, தமிழ்நாடு முழுவதும் கட்சி அலு வலகங்களிலும், இல்லங்களிலும் பொங்கலிட்டு தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என குலவை யிடுவோம். குறுகிய மதவெறி, சாதிவெறியை முறியடிக்க தைத் திருநாளில் உறுதி ஏற்போம். முன்னேற்றத்தின் தடைச் சுவ ராகும் பழைமை குப்பைகளை எரித்து, புதுயுகம் படைக்க பொங்கல் திரு நாளில் உறுதி ஏற்போம்” என்று கூறி யுள்ளார். திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திருமாவ ளவன், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித் திருக்கிறார்கள்.
ராகுலின் நடைப்பயணம் இன்று பிற்பகல் மீண்டும் துவங்குகிறது
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகிலுள்ள பிலாப்பூர் பகுதியில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி (76), சனிக்கிழமையன்று காலை மாரடைப்பால் கால மானார். இதையடுத்து, சவுத்ரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, தனது நடை பயணத்தை 24 மணி நேரத்திற்கு ஒத்தி வைத்தார். இதன்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஜலந்தர் அருகிலிருந்து மீண்டும் நடைப்பயணம் துவங்கும் என்று அறி விக்கப்பட்டு உள்ளது.
கொரோனா: குணமடைந்தோர் 64.21 கோடி
வாஷிங்டன்,ஜன.14- கொரோனா வைரஸ் 231 நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற் படுத்தி உள்ளது. கொரோ னாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி கள் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையிலும், டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உரு மாற்றமடைந்த வைரஸ் தொடர்ந்து பரவி வரு கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 67 கோடியே 1 லட்சத்து 26 ஆயிரத்து 697 ஆக அதி கரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். பாதிப்பில் இருந்து இதுவரை 64 கோடியே 21 லட்சத்து 14 ஆயிரத்து 963 பேர் குணமடைந்துள்ள னர். கொரோனா வைர சால் உலகம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 29 ஆயிரத்து 67 பேர் உயிரி ழந்துள்ளனர்.
குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
புதுக்கோட்டை, ஜன.14- வேங்கைவயல் சம்பவத்தில் வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக காட்ட காவல்துறை முயற்சிப்பதால் வழக்கு விசா ரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தர விட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சி யினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இறையூர் வேங்கைவயல் காலனி மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் நீரை அசுத்தப்படுத்தியது சம்பந்தமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்கநர் (டிஜிபி) உத்தரவில் தெரி வித்திருப்பது: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் வட்டம் வெள்ளனூர் காவல் சர கத்திற்குட்பட்ட இறையூர் வேங்கைவயல் காலனி யில் கடந்த 26.12.2023-ஆம் தேதி ஆதிதிராவிட குடி யிருப்பு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை குடி நீர்த் தேக்கத் தொட்டியில் நீரை அசுத்தப்படுத்தியது சம்பந்தமான வழக்கு வெள்ளனூர் காவல் நிலை யத்தில் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரை வாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சனிக்கிழமையன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்கள்.