states

img

செப்.28 மண்டல தலைமையகங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி,செப்.24- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் புதனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலப் பொ துச்செயலாளர் கே.கர்சன்,மாநில பொருளா ளர் வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், தமிழக போக்கு வரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய 70 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற வர்களின் வயதை கணக்கில் கொண்டு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 1.5.2020 முதல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் காலமான தொழிலாளர்களின் குடும்பங்க ளுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி முதற்கட்டமாக செப்டம்பர் 28 ஆம் தேதியன்று அனைத்து மண்டல தலைமையகங்கள் முன் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. இரண்டாவது கட்டமாக கோட்டை தலைமை அலுவலகம் முன்பு  அக்டோபர் மாத இறுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன.

;