புதுதில்லி, மே 1- சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அதன் விலை உன்னிப்பாக கண்கா ணிக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு கூறிக்கொண்டுள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வது பாமாயில் ஆகும். நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பாமாயில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து 8.3 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசிய அரசு, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பாமா யில் ஏற்றுமதி செய்வதற்கு திடீர் தடை விதித் துள்ளது. மோடி அரசின் விலை உயர்வு களால் ஏற்கெனவே அவதிப்படும் இந்திய மக்கள், சமையல் எண்ணெய் விலை உயரும் என்று அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், சமையல் எண்ணெய் களின் இருப்பு மற்றும் அதன் விலை உன் னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுவிநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அனைத்து வகையான சமையல் எண்ணெய்கள் போதிய அளவு கையிருப் பில் உள்ளது.
அனைத்து வகை சமையல் எண்ணெய்களின் தற்போதைய கையிருப்பு சுமார் 21 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். மேலும் 12 லட்சம் மெட்ரிக் டன் மே, மாதத்தில் வந்து சேரும். இந்தோனேசியாவில் சமையல் எண் ணெய் வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலத்தில் தேவை யை ஈடுகட்ட போதுமான அளவு நாட்டில் சமையல் எண்ணெய் வகைகள் கையிருப் பில் உள்ளது. சமையல் எண்ணெய்களின் இருப்பு மற்றும் அவற்றின் விலைகளை உணவு மற் றும் பொது விநியோகத் துறை கண்கா ணித்து வருகிறது, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்நாட்டு சமையல் எண்ணெய் வகைகளின் விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மேலும் குறைப்பது குறித்து விவாதிக்க முக்கிய சமையல் எண்ணெய் பதப்படுத்தும் சங்கங்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகளவில் சமையல் எண்ணெய் உற்பத்தியில் நிலவும் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் ஏற்றுமதி வரி கள் அதிகரிப்பு காரணமாக சமையல் எண் ணெய்களின் சர்வதேச விலைகளில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உலகில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இத்துறையில், வேளாண் சார்ந்த பொருளாதா ரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ள 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் ஒன்பது பயிரிடப்பட்ட எண்ணெய் வித்துக் களில் 37.14 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.