சென்னை,ஏப்.4- கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறுகை யில், தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அள வில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன் னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். மருத்துவமனை களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணியு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாச நோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பா னதாக இருக்கும் என்றார்.