states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதி கரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கேரளாவில் இருவரும், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா ஒருவர் என 5 பேர் உயிரிழந்தனர். புதிய திரிபான ஜேஎன் 1 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெள்ளியன்று தனது அறிக்கையில் தகவல்  தெரிவித்துள்ளது.

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட “அயோத்தி தாம்” ரயில் நிலையம், மஹரிஷி வால்மீகி விமான நிலையம், இரண்டு அம்ரித் பாரத் ரயில்கள், படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் ஆகியவற்றை பிரதமர் மோடி சனியன்று தொடங்கி வைக்கிறார்.

தில்லியில் அடர்த்தியான பனி மூட்டம் காரண மாக வெள்ளியன்றும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மூடுபனியால் காணும் திறன் மிகவும் குறைவாக இருந்ததால் ரயில்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன ஆலை குஜராத்  மாநிலத்தில் அமையவுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டு 397 மாவோயிஸ்டுகள் கைது செய்யப் பட்டுள்ளதாகவும், 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 26 பேர் சரணடைந்திருப்பதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிறந்த பிர்தெளஸ் கராஸ், கன டாவின் உயரிய பதவியான  ‘ஆர்டர் ஆஃப் கனடா’ அதிகாரி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்திற்கும் இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.