states

தெலுங்கானா தலைமைச் செயலக குவிமாடத்தை இடிப்போம்!

பாஜக தலைவர்  பண்டி சஞ்சய் குமார் கொக்கரிப்பு

ஹைதராபாத், பிப். 11 - தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்ததும், அனைத்து வகையான நிஜாம் கலாச்சார கட்டமைப்புகளையும் அழிப் போம்; தாஜ்மகாலைப் போல கட்டப்பட்டுள்ள தெலுங்கானா தலைமைச் செயலக குவிமாடத்தையும் இடிப்போம் என்று பாஜக தெலுங்கானா மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் குமார் வெறுப்பைக் கக்கியுள்ளார். ஹூசைன் சாகரில் ஏரியையொட்டி, தெலுங்கானா மாநிலத் திற்கான புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த தலை மைச் செயலக கட்டடத்தை தனது பிறந்த நாளான பிப்ரவரி 17-ஆம் தேதி முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் திறந்து வைக்க வுள்ளார். இந்நிலையில்தான், குக்கட்பல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசியிருக்கும் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், ““மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஓவைசியை திருப்திப்படுத்தும் வகையில் தாஜ்மகால் வடிவில் தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. எங்கள் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் தலைமைச் செயலகக் கட்டிடத்தின் மேல் தாஜ்மகால் போன்றுள்ள குவிமாடங் கள் இடிக்கப்படும். இந்திய கலாச்சாரத்துடன் இது ஒத்துப்போக வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தலைமை  செயலகம் மாற்றி அமைக்கப்படும்” என்று இஸ்லாமிய வெறுப்பைக் கக்கியுள்ளார். சாலை விரிவாக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் வழி பாட்டுத் தலங்களை அரசு இடிக்கும் என்று முதல்வர் சந்திர சேகர் ராவின் மகன் ராமாராவ் கூறியிருந்த நிலையில், “முடிந்தால் பழைய சாலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள மசூதிக ளையும் இடித்து தள்ளுங்கள்” என்றும் பண்டி சஞ்சய் குமார் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.