புதுதில்லி, ஜூன் 10 - பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வை, “ஒரு நாடு, ஒரு ரேசன் கார்டு”; “ஒரு நாடு, ஒரே நுழைவுத்தேர்வு”; “ஒரு நாடு ஒரே ஓய்வூதியம்”; “ஒரு நாடு, ஒரே தேர்தல்” என ஒன்றிய பாஜக அரசானது, முழுக்க முழுக்க ஒற்றைத்தன்மையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. அதனொரு பகுதியாக, ‘ஒரு நாடு, ஒரே காவல்துறை’ (One Nation, One Police) என்ற திட்டத்தையும் அது கையில் எடுத்தி ருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் சட்டம் - ஒழுங்கு, அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட் பட்டதாக இருக்கிறது. அதனால் காவல்துறையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலை யில், காவல்துறையை பொதுப்பட்டி யலுக்கு கொண்டுவருவதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கவும், அதற்கு முன்னோட்டமாக, நாடு முழு வதும் காவல்துறைக்கு ஒரே மாதிரியான சீருடை என்ற பெயரில் முன்னோட்டம் பார்க்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான முயற்சியை கடந்த 2017-ஆம் ஆண்டே மோடி அரசு ஆரம்பித்து விட்டது. குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் உள்ள ‘நேஷனல் இன்ஸ்டிடி யூட் ஆப் டிசைன்’ நிறுவனம் மூலம் ஒன்பது விதமான சீருடைகளை வடிவமைத்தது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (Bureau of Police Research and Development - BPR&D) ஆலோசனை யுடன், ‘பேண்ட், சட்டை, மழை கோட், ஹெல்மெட்’ உட்பட அனைத்தையும் குஜராத் நிறுவனம் மூலமாக வடி வமைத்து பெற்றது. இந்நிலையில்தான், ஒரே மாதிரியான காவல்துறை சீருடையை அமல்படுத்தும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு மீண்டும் தீவிரமாகி இருக்கிறது. இதுதொடர்பாக, தேசிய பாதுகாப்புக் கவுன்சில்க (National Security Counci - NSC) டந்த மே 2 அன்று மாநில காவல்துறை தலைவர்களுக்கு (DGP) இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி யுள்ளது. அதில், அந்தந்த மாநில காவல்துறையின் சீருடை, அணியும் தொப்பி, சின்னங்கள் உள்ளிட்ட அனை த்து விபரங்களையும் தங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது.
ஆனால், எதற்காக இந்த விவரங் களை கேட்கிறோம் என்ற காரணத்தை தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தெரிவிக்கா ததால், இந்த கடிதத்துக்கு, பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் பதில் அனுப்பவில்லை. ஆனாலும் ஒன்றிய அரசு விடுவ தாக இல்லை. தேசிய பாதுகாப்பு கவுன்சி லின் இணைச் செயலாளர் குந்தன் கிரு ஷ்ணன், மே 24 அன்று, நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் மாநில காவல்துறை களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், இதற்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கோவா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறை சீருடை பற்றிய விபரங்களை தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கேட்டிருப்பது, மாநில அரசுகளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையைப் பொதுப் பட்டியலில் கொண்டு வருவதற்கான ஒன்றிய அரசு திட்டத்தின் ஒருபகுதியே இது என்று மேற்குவங்க மாநில காவல் துறை உட்பட பல்வேறு மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன “காவல்துறையை மாநில அரசின் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்ற, சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேபராய், அண்மையில் கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டும் மாநில அரசுகள், “ஒரு நாடு, ஒரே காவல்துறை” திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னோட்டம் தான் “ஒரே காவல்துறை சீருடை” என்றும் உறுதிபடக் கூறுகின்றன. இதனைத் தாங்கள் ஏற்கமாட்டோம் என்றும் தெரிவிக்கின்றன.
மாநில அரசுகளைக் கலந்தாலோ சிக்காமல், இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றை மறுஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதத்தில் குழு ஒன்றை அமைத்தது. அப்போதும், சட்டம் - ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், தங்களை கலந்து ஆலோசிக்காமலேயே, ஒன்றிய அரசு தன்னிச்சையாக ஆய்வுக் குழுவை அமைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும், மாநி லங்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களு டனும் இதுதொடர்பாக ஆலோசித்தி ருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. எனினும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவே மோடி அரசு அடுத்தடுத்து தனது காய்களை நகர்த்தி வருகிறது. காவல்துறையின் சீருடை எவ்வாறி ருக்க வேண்டும் என்பதும், அதனை மாற்றியமைப்பது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியதும் மாநிலங்களின் விருப்பம், உரிமை சார்ந்தது. அதற்கான அதிகாரத்தை அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்குகிறது.
இதற்குள் ஒன்றிய அரசுக்கு வேலை யில்லை என்பதே மாநில அரசுகளின் கருத்தாக உள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான காவல்துறைச் சட்டம் இல்லை என்பதை காரணமாக கூறி, தனது அத்துமீறலை அரங்கேற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் காவல்துறையினரின் சீருடைகளில் மாநி லங்களின் தன்மைக்கேற்ப வித்தியாசம் இருந்தாலும், பொதுவாக அவை காக்கி நிறத்தில்தான் இருக்கின்றன. மேற்கு வங்கத்தில் தலைநகர் கொல்கத்தாவில் மட்டும் காவல்துறையினர் வெள்ளைச் சீருடை அணிகின்றனர். மற்ற பகுதி களில் காக்கி சீருடையையே அணி கின்றனர். கோவாவில் போலீசாரின் சீருடை நீல நிற பேண்ட், வெள்ளைச் சட்டை என்பதாக உள்ளது. புதுச் சேரி போலீசாரின் சீருடை, பிரான்ஸ் நாட்டின் காவல்துறையில் இருப்பது போல உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், ஒடிசா போலீசார் “டியூனிக் சீருடை” மற்றும் குறுக்கு பெல்ட் அணிவதை அவர் களாகவே நிறுத்தினர். மகாராஷ்டிரா காவல்துறை ஆங்கிலேயர் கால ஓவர் கோட் அணியும் வழக்கத்தை அண்மை யில் நீக்கியது. எனினும் இவை அனைத்தும் மாநிலங்களின் அதிகாரம், உரிமையுடன் தொடர்பு உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.