states

ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 29- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்திற்குட்பட்ட வேங்கைவயல் கிரா மத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழி வுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும் வழக்கு தொடர்பாக ஒரு வர் கூட கைது செய்யப்படவில்லை என்றும், முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் கூறி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திரு வள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த  ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும்  தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருவதாகவும், அரசியல் சாச னத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி என்பது இன்ன மும் தொலைதூரக் கனவாக உள்ளதாகவும், பட்டியலின மக்கள் இரண்டாம்தர குடி மக்களாக நடத்தப்பட்டு வருவதாகவும் மனு வில் கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சிபிசிஐடி காவல்துறை யினர் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருவதாகவும், தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை என்றும் கண்துடைப்பாக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர் வில் புதனன்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசார ணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல்  செய்தார். அந்த அறிக்கையில், வழக்கின்  புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவ தாகவும், உயரதிகாரிகள் விசாரணையை கண் காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதையடுத்து, சம்பவம் நடந்து 90  நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணை யில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரி வித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாரா யணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.