states

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை; சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு உறுதியான நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை,ஏப்.12-  ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறித்து தமி ழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கி ணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி  உள்ளது. தமிழ்நாடு அரசு தனது தரப்பில்  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கடந்த கால நட வடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த போதிலும், அவர்கள் இந்த ஊர்வலத்தை பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்ட முறை யில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவ ரத்தை தூண்டுவார்கள் என்று ஆதாரங்களு டன் வாதிட்ட போதிலும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனு மதி அளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால வரலாறு  அனைவரும் அறிந்ததே. அவர்கள் சமீபத்தில் கூட பீகாரில் ராமநவமி விழாவை பயன் படுத்திக் கொண்டு,   சிறுபான்மையினரை கொன்ற நிகழ்ச்சிப் போக்குகள் வலுவான  ஆதாரங்களாக உள்ளன. ஊர்வலம், பேரணி, பொது நிகழ்ச்சி எது நடத்தினாலும் அங்கே கல வரத்திற்கும் வன்முறைக்கும் முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.  

இந்தநிலையில் உச்சநீதிமன்றம் இத்த கைய ஆர்எஸ்எஸ் அமைப்பின் கடந்த கால  நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொண்டதா என்பது கேள்விக்குறியாக உள்  ளது. நாட்டில் ஜனநாயக அமைப்புகள் பேரணி,  ஊர்வலம் பொது நிகழ்ச்சிகள் நடத்து வது என்பது ஜனநாயக நடைமுறைதான். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அத்தகைய ஒரு ஜனநாயக இயக்கம் அல்ல. இவர்கள் நோக்கமே சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை கலவரங்களை தூண்டி விட்டு, பெரும்பான்மை சமூகமாக உள்ள இந்துக் கள் மத்தியில் சிறுபான்மையினர் மீதான ஒரு வெறுப்புணர்வை வளர்ப்பது தான்.   எனவேதான் தமிழகத்தில் அத்தகைய ஒரு பேரணிக்கு அனுமதி தந்தால் அது திட்ட மிட்ட வன்முறைக்கு வழி வகுக்கும் என்பதே கடந்த கால அனுபவமாகும். எனவே தமிழ கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், பேரணிக்கு  அனுமதி வழங்கப்பட்டது இல்லை. உச்சநீதி மன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள சூழ் நிலையில் தமிழக அரசு இது குறித்தான மேல்  நடவடிக்கைக்கு ஆலோசித்திட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தினால் ஏற் படும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் சிறு பான்மையினர் பாதுகாப்பு குறித்தும் சரியான உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.