சென்னை, மே 18- தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வி யாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெள்ளிக் கிழமை (மே 19) காலை 10 மணிக்கும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கும் வெளியாகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். அதே போல் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் சென்னையிலுள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளங்களில் தேர்வர் கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்தி லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்க ளிலும் (National Informatics Centre’s) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்க ளுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர் வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப் பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.