சென்னை,ஏப்.30- அதிமுக 6 ஆக உடைந்துவிட்டது, அதற்கு கவர்ச்சியான தலைமை இல்லை என பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கூறி இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணா மலையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு பாஜக இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் “தோழமை அடி ப்படையில், கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சரை நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார். சந்திப்புக்கு பின்னர், எங்கள் கட்சியின் சார்பில் யாரும் பாஜ கவை விமர்சிக்கவில்லை. ஏன் எங்களுக்கு விமர்சிக்கத் தெரியாதா? அதிமுகவினரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், பாஜக வில் ஏன் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது? என்பதுதான் கேள்வி. அந்த கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் கூறியிருந்தால் பரவாயில்லை, ஏதோ எங்களுக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்று கூறலாம். அக்கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், அதிமுகவின் தலைமை சரியில்லை. அதிமுக ஐந்து ஆறாக உடைந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.
அதிமுக என்ன ஐந்து, ஆறாக உடைந்திருக்கிறதா? மஞ்சள்காமாலை உடையவர் களுக்குத்தான் இதுபோல தெரியும். அதுபோல் ஆகிவிட்டாரா எஸ்.ஆர். சேகர்? இதெல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா? சொல்லாமல் நடக்கிறதா? என்பதை அண்ணா மலையே தெளிவுப்படுத்த வேண்டும். அண்ணாமலை என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இனிமேல் இதுபோன்ற கருத்துகள் பாஜக தரப்பில் இருந்து வராது; கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எங்கள் கட்சியினரை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அவர் தெரிவிக்க வேண்டும். ஒரு வேளை இவ்வாறு செய்யாவிட்டால், கட்சி அண்ணாமலையின் கட்டுப் பாட்டில் இல்லை என்று அர்த்தம். எனவே,அண்ணாமலை பகிரங்க மாக, “எங்கள் கட்சியின் பொருளாளர் எனக்குத் தெரியாமல் ட்விட்டரில் தகவல் பகிர்ந்துள்ளார். அது தவறு. நான் அவரைக் கண்டிக்கிறேன்” என தமிழ்நாட்டிற்கு, ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படி கூறி னால்தான் அண்ணாமலை மீது எங்க ளுக்கு சந்தேகம் இருக்காது. இல்லை யென்றால், அண்ணாமலை சொல்லி தான் இவ்வாறு அவர் கூறியிருக் கிறார் என்று நாங்கள் நினைக்க வேண்டி யிருக்கும்” என்று அவர் கூறினார். கடந்த 27ம் தேதி எஸ்.ஆர். சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைக ளுடன் நடந்த கூட்டம். தமிழகத்தில் எந்த முடிவையும் மலையே எடுப்பார். அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடி வெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு உணர்த்திய அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா” என்றும் குறிப்பிட்டிருந்தார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. பாஜக அழுத்தம் காரணமாக அதிமுக மூத்த தலைவர்கள் பதில் சொல்லாமல் அடக்கி வாசித்து வருவதும் அதிமுக தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.