states

அதிமுக ஆட்சியின் ஊழல்-முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக!

அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, மே 10- சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்திய அதி முக ஆட்சியில் நடந்துள்ள அடுக்கடுக்கான ஊழல் - முறைகேடுகள் மீது தமிழக அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மே 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முக மது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்  தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி,  பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செய லாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்  தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.  

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கைகள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களை தீட்டுவது, நிறைவேற்றுவது, ஆய்வு செய்  வது, பணம் வழங்குவது, டெண்டர் விடுவது,  பயனாளிகளை வெளிப்படையாகத் தேர்ந்தெ டுப்பது, உரிய காலத்தில் திட்டங்களை முடிப்  பது என்று பல்வேறு பலவீனங்களை சுட்டிக்  காட்டியுள்ளது. பலவீனங்களும், காலதாமத மும் பல்வேறு ஆட்சிக்காலங்களிலும் நடந்தி ருக்கிறது. ஆனால், ஊழலும் - முறைகேடும், வரிப்பணம் சூறையாடப்படுவதும் உரிய முறையில் தடுக்கப்படாததால் மக்களுக்குச் சேர வேண்டிய பலன் கிடைக்காமல் போவ தும் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை பக்கம்,  பக்கமாக சுட்டிக்காட்டியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை இரண்டும் ஒருசேர எடப்பாடி பழனி  சாமி வசமே இருந்தது. அந்த துறைகளில் ஊழல் மலிந்து கிடப்பதை சிஏஜி அறிக்கை  சுட்டிக்காட்டியிருக்கிறது. டெண்டர்கள் ஒரே  கம்ப்யூட்டரிலிருந்து பலருக்காக அனுப்பப் பட்டது, அரசு கம்ப்யூட்டர்களிலிருந்து காண்ட்ராக்டர்களின் டெண்டர்கள் அனுப்பப் பட்டது என்பதில் ஆரம்பித்து ஏராளமான முறைகேடுகளை சி.ஏ.ஜி. அறிக்கை பட்டிய லிட்டிருக்கிறது. ஒப்பந்தக்காரர்கள் தங்க ளுக்குள் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு  ஏலப்போட்டியைத் தவிர்த்து, சில நபர்களுக்கு மட்டும் அதிக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள தையும் சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோன்று, ஊரக வளர்ச்சித்துறையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஐந்தாண்டு காலத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்  பட்டிருக்க வேண்டும். 2.8 லட்சம் வீடுகள் மட்டுமே முடிக்கப்பட்டிருக்கின்றன. 89 ஆயி ரம் வீடுகளுக்கு நான்காண்டுகள் முடிந்தபிற கும் முதல் தவணை பணம் கொடுக்கப்படாமல் இருக்கிறது. ஒன்றிய அரசின் நிபந்தனை களை நிறைவேற்றாததால் ரூ. 1515 கோடி  தமிழக அரசால் பெறமுடியாமல் போய்விட் டது. பயனாளிகளில் 60 சதவிகிதம் பட்டிய லினத்தவர்கள் இருக்க வேண்டும் என்பது  கடைப்பிடிக்கப்படவில்லை. தகுதியற்ற வர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. வீடு ஒதுக்கப்பட்டவர் ஒருவராகவும், பணம் பெற்றவர் மற்றொருவராகவும் இருக்கும் ஏராளமான நிகழ்வுகளை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஆய்வு செய்யப்பட்ட இரண்டுஊராட்சி ஒன்றியங்களில் முறைகேடு செய்யும் நோக்  கத்தோடு ஆவணங்கள் திருத்தப்பட்டிருக்கின் றன. வீடு இருக்கும் இடங்களை பற்றி புவிசார் குறியீடுகளை ஆராய்ந்தால் வங்காள விரி குடாவிலும், உத்தரப்பிரதேசத்திலும், புது தில்லியிலும் மற்றும் பல மாநிலங்களிலும் காட்டப்படுகிறது. இப்படி ஏராளமான முறை கேடுகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதுபோன்று மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கியது, மடிக்கணினியை உரிய  காலத்தில் வழங்காமல் அவை பயனற்று போனது, மாணவர்களுக்கு காலணி வாங்கி யதில் முறைகேடு என்று பல்வேறு குற்றச்  சாட்டுக்களை சி.ஏ.ஜி. முன்வைத்துள்ளது. இவையனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரி களோடு மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் தொடர்பில்லாமல் நடந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு சி.ஏ.ஜி. அறிக்கை களில் வெளிவந்துள்ள ஊழல் மற்றும் முறை கேடுகள் குறித்து உரிய முறையில் விசா ரணை நடத்தி தவறிழைத்தோர், தவறுக்கு துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தா லும் அவர்களை தண்டிக்க வேண்டுமென மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கி றது.