states

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுவாதியின் மனு தள்ளுபடி

மதுரை, ஜன.7- பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில்  பிறழ் சாட்சியான சுவாதி மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இதற்கு  எதிராக சுவாதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்த மனு நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. கொலை வழக்கில் சங்ககிரி பகுதியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை  நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள்  தண்டனை வழங்கப்பட்டது. ஐந்து பேர் விடு தலை செய்யப்பட்டனர்.  விடுதலையான 5  பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று  கோரி கோகுல்ராஜ் தாயார் மேல்முறையீடு செய்தார். இந்த விசாரணையில் பிறழ் சாட்சி யாக கருதப்பட்ட சுவாதி மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை  ரத்து செய்யக்கோரி சுவாதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதி மன்றம் ஜனவரி 6 அன்று அவரது மேல்முறை யீட்டு மனுவை விசாரித்து, உயர்நீதிமன்ற மதுரை  கிளை நீதிபதிகள் உத்தரவிட்டது சரி என்று கருதி, அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.   இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு தொடர்பாக விசா ரணை நடைபெற்றது. 

சாட்சியங்கள் பொய் சொல்லாது 

இதுகுறித்து கோகுல்ராஜ் தரப்பு வழக்கறி ஞர் ப.பா. மோகன் தீக்கதிர் நிருபரிடம்  கூறுகை யில், இந்த வழக்கில் ஐந்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தண்டனை பெற்றவர்கள் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 15 பேர்களில் ஐந்து பேர்  விடுதலை செய்யப்பட்டனர் .அந்த ஐந்து பேர்  விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்று  கோகுல்ராஜ் தாயார் சித்ரா கொடுத்த மேல்முறையீட்டு மனு ஒன்றும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது இந்த கொலை வழக்கில் 26 குற்றச்சாட்டுகளில் நான்கு குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளதாக எதிர் தரப்பில் வாதாடப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள சிசிடிவி பதிவுகள் மட்டுமே இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வெளியே சென்ற பிறகு எந்த விதமான சிசி டிவி காட்சிகளும் சாட்சியங்களாக வைக்கப்பட வில்லை என்றும் வாதிடப்பட்டது. கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்டதற்கான ஆதா ரங்களே இல்லை என்று யுவராஜ் தரப்பு வழக்க றிஞர்கள் கோபால் ராஜ், அசோக் குமார் ரமேஷ்  ஆகியோர் வாதிட்டனர் .சாட்சிகள் பொய்  சொல்லலாம். சாட்சியங்கள் பொய் சொல்லாது என்று நாங்கள் வாதிட்டோம். கோகுல்ராஜின் செல்போனை பிடுங்கிச்சென்றது. அவரை கடத்திச் சென்றது .வண்டியை மாற்றிச் சென்றது. தான் தற்கொலை செய்வதாக கோகுல் ராஜை பேச வைத்தது. இதற்கெல்லாம் சாட்சி யம் இருக்கிறது என்று நாங்கள் நிரூபித்தோம். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இது  குறித்து விவாதம் நடைபெற்றது. அர்த்த நாரீஸ்வரர் கோவிலை ஆய்வு செய்ய வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்தில் நாங்கள் கேட்டுக்  கொண்ட பொழுது நீதிபதிகள் அதனை ஏற்றுக்  கொள்ளவில்லை. ஆனால் தற்போது ஆய்வு  செய்வதாக நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ள னர். ஜனவரி  22 ஆம் தேதி நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்யவுள்ளனர் என்று தெரிவித்தார்.