சென்னை,நவ.24- மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாக கட்டும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. மின் அலுவலகங்க ளுக்கு நேரில் சென்று செலுத்து வோர் எண்ணிக்கை மிக மிக குறைவாகும். மின் கட்டண உயர்வு பாதிப்பிலிருந்து விடுபடாத நிலையில் திடீரென ஆதார் எண்ணை இணைக்க கூறுவது மின் நுகர்வோரை மேலும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எந்த நோக்கத்திற்காக ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்காமலும் கால அவகாசம் கொடுக்காமலும் திடீரென அறிவித்துள்ளது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘கூகுள்பே’ மூலம் மட்டும் தற்போது ஆதார் இணைக்கப் படாமல் மின் கட்டணம் செலுத்த முடிகிறது. இணையதளம் வழியாக செலுத்த முடியாமல் மக்கள் தடு மாறுகிறார்கள். கடைசி நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகிற நிலையில் ஆதார் இணைக்க கால அவகாசம் கொடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் வலியுறுத் துகின்றனர்.
ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் பலர் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற னர். கம்ப்யூட்டர் சேவை மையங் களை நாடி ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். பாமர மக்களுக்கு உதவிட மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள மின் சார அலுவலகங்களில் இதற் காக பிரத்தியேக கவுண்டர் திறக் கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் ஆதார் அட்டையை கொண்டு சென்றால் போதுமானது. அதனை எவ்வித கட்டணமும் இல்லாமல் இணைத்து கொடுக்கப்படுகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் வீட்டின் உரிமையாளரின் ஆதார் எண், செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். மின் இணைப்போடு ஆதார் எண் இணைக்கும் போது அதில் பதிவாகி உள்ள மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனால் ஆதாரில் குறிப்பிட் டுள்ள மொபைல் போன் எண்ணை கட்டாயம் மின்சார அலுவலகத் திற்கு கொண்டு செல்ல வேண்டும்.