நாகர்கோவில், செப். 28- கடந்த செப். 19 அன்று பொது மக்கள் நிறைந்த பகுதியில் மாணவர் ஒருவரை ஒரு கும்பல் ஓடஓட விரட்டி தாக்கும் காட்சி ஒரு தொலைக்காட்சி யில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படு த்தியது. மற்றொரு தொலைக்காட்சி யோ அந்த மாணவர் போதைக்கு அடிமையானவர் என புகைபிடிக்கும் காட்சியுடன் வெளியிட்டு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஒருவாரம் முன்புதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் செய்தியாளர்ளை சந்தித்து மாவட்டத்தில் இதுவரை 891 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும், மாணவர்களும் பொதுமக்களும் போதை ஒழிப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து தக வல் தெரிவிக்க 7010363173 என்கிற தொடர்பு எண்ணையும் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிக அளவில் உள்ளதாக வும், திட்டமிட்டு இளைய தலைமுறை யினரை போதைக்கு அடிமையாக் கும் கும்பல் சுதந்திரமாக சுற்றி வருவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்து வரு கிறது. இத்தகைய கும்பல்களுக்குள் நடந்த மோதலில் படுகொலைகளும் நடந்துள்ளன. போதை பழக்கத்தால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பாஜக மீனவர் அணி மாநில செயலாளர் மீது புகார்
இந்நிலையில் நாகர்கோவில் அருகில் உள்ள புத்தேரி பேருந்து நிறுத்தம் அருகே சிறுவனை தாக்கிய கும்பல் குறித்து அவனது தாயார் எஸ்.அயனிஸ்மேரி திங்களன்று (செப்.26) மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கடந்த 19.9.2022 அன்று தனது மகன் அபிஷேக் குமார் (16) பள்ளிக்கு செல்வதற்காக புத்தேரி பேருந்து நிறுத்தத்தில் நின்ற தாகவும், அப்போது பாஜக மீனவர் அணி மாநில செயலாளர் சகாயம் என்கிற அய்யப்பன் தலைமையில் 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவர், வட சேரி காவல்நிலையத்தினர் குற்றவாளி களுக்கு சாதகமாக நடந்துகொண்ட தாகவும் மனுவில் குற்றம்சாட்டி யுள்ளார். அபிஷேக்குமார் தொட ர்ந்து ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரு கிறார்.
இந்திய மாணவர் சங்கத்தின் உதவி யுடன் தனது மகனுக்கு நியாயம் கேட்டு அயனிஸ்மேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளார். அப்போது அவ ருடன் உறவினரான சிறுவன் ஷாம் (17) மற்றும் டேவிட் (21) ஆகியோர் சென்றுள்ளனர். இதற்கு பழிவாங்கும் விதமாக வடசேரி காவல்துறையினர் அவ்விருவரையும் காவல் நிலை யத்துக்கு கொண்டுசென்று தாக்கிய தாக ஷாம் தெரிவித்தார். அதோடு போதை மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. போதை பழக்கம் இல்லாத தனது மகன் தற்போதுதான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு மேற்படிப்பு செல்ல பணமில்லாமல் தவிப்பதாக ஷாமின் தாயார் விஜயா தெரிவித்தார். ஏழை தலித் குடும்பத்து சிறார்களை குறிவைக்கும் கஞ்சா வியாபாரிகள், அவர்கள் கஞ்சா பயன்படுத்துவதை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி கஞ்சா வியாபாரத்துக்கு பயன்படுத்து வதாக கூறப்படுகிறது. இளைஞர் சமூ கத்தை சீரழிக்கும் பெரும் குற்ற மிழைக்கும் செல்வாக்கு மிக்க நபர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட சிறார்களையே குற்றவாளியாக்கி காவல்துறையினர் விசாரணை யின்போது பின்பற்ற வேண்டிய விதி முறைகளை மீறியும் தாக்கியும் வட சேரி காவல்துறையினர் அத்துமீறியுள் ளனர். இதற்கு சிறார் பாதுகாப்பு அலுவலர்களும் துணை நிற்கிறார்கள் என்பதுதான் வன்கொடுமையின் உச்சம். ஏனெனில் பாதிக்கப்பட்ட சிறார்களும் வாலிபரும் தலித்துகள்.