சென்னை, மே 19- கோயில் மொபைல் ஆப் மூலம் முதற் கட்டமாக 50 கோயில்களின் சேவைகளையும் திருப்பணிகளை யும் அறிந்து கொள்ளலாம் என இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாட்டில் இருக்கும் திருக் கோவில்களின் தகவல்களைப் பற்றி பக்தர்கள் எளிதாக அறிய அவர் களுக்கு உதவும் வகையில் திருக் கோயில் விவரம் பற்றிய முழு தகவல் உள்ளடக்கிய திருக்கோயில் என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 48 முது நிலை திருக்கோவில்களின் பிரசா தம் பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தபால் துறையுடன் இணைந்து அஞ்சல் வழி பிரசாதம் அனுப்பும் திட்டமும் தொடங்கப் பட்டது. அதனை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர், திருக்கோயில் செயலி மூலம் முதற் கட்டமாக 50 திருக்கோயில்களில் சேவைகளை யும் திருப்பணிகளையும் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.