states

சேலம் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் மக்கள் ஆலய நுழைவுப் போராட்டம்

சென்னை, ஜன.30- சேலம் திருமலைகிரி பெரிய மாரி யம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெறும் என தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறி வித்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டத்தில் உள்ளது திருமலைகிரி. இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் தலித் சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கோவிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனை அறிந்த சாதியவாதிகள், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் கோவி லுக்குள் சென்றால் கோவில் தீட்டாகி விடும் என்றும், சாதி இந்துக்களாகிய நாங்கள் கோவிலுக்குள் வரமாட்டோம் எனவும் தெரிவித்ததாகக் கூறி, திரு மலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் டி. மாணிக்கம் என்பவர் கடந்த 27ஆம்  தேதி கிராமத்து மக்கள் அனைவரை யும் கூட்டி வைத்து ஆபாசமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

ஆபாச சொற்களை பேசியதோடு, கிராமத்தை விட்டே விரட்டி விடுவேன், கொலை செய்து விடுவேன் என்றும் நேரடியாக மிரட்டியுள்ளார். இந்தச் செய்தியை அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சேலம் இரும்பாலை காவல்துறையினர், வெட்கக்கேடான முறையில் பிரவீனை அழைத்து சமாதானப்படுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. மாநில காவல்துறையும், மாநில நிர்வாகமும்  உடனடியாக ஊராட்சித் தலைவர் மாணிக்கத்தை எஸ்சி-எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தில்  வழக்குப் பதிவு செய்து எங்கிருந்தா லும் கைது செய்ய வேண்டும்.இவ்வ ளவு கொடூரமான வார்த்தைகளை பயன் படுத்தக்கூடிய, தலித் மக்களுடைய வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்தக்கூடிய மாணிக்கத்தை அந்த கிராமத்தை விட்டே சட்டப்படி வெளி யேற்ற வேண்டும். மேலும் ஓரிரு தினங்களில், தீண்டா மை ஒழிப்பு முன்னணி, பெரிய மாரி யம்மன் கோவிலில் தலித் மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும்   ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.