உமர் காலித் விடுதலை
புதுதில்லி, டிச.3- 2020 தில்லிக் கலவரங்களு டன் தொடர்புபடுத்தி கல்லெறி வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப் பட்டவராகப் பிணைக்கப்பட்டி ருந்த தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் உமர் காலித், நீதி மன்றத்தால் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.
தில்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை,டிச.3- ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா அடுத்த ஆண்டு (2023) ஜி-20 மாநாட்டை இந்தியாவில் நடத்துகிறது. இதற்காக டிசம்பர் 5ஆம் தேதி தில்லியில் ஆலோசனை கூட்டத்தை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தில்லி செல்ல உள்ளார். அதன்படி 5 ஆம் தேதி காலை தில்லி சென்று கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவே சென்னை திரும்ப உள்ளார்.
ஊர்க்காவல் படையினருக்கு பணி நேரம் குறைப்பு
சென்னை,டிச.3- தமிழ்நாட்டிலுள்ள ஊர்க்காவல் படையினர் பணி நாட்களை மாதத்தில் 5 நாட்களாக குறைத்து 2017ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஊர்க்காவல் படையை சேர்ந்த அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், முதலில் 25 நாட்கள் பணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் ஊர்க்காவல் படையினருக்கு ஊதி யத்தை உயர்த்தி வழங்க வேண்டு மென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை யடுத்து மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே தாங்கள் பணிக்கு அழைக்கப்படுவதாக கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊர்க்காவல் படையினர் பணிக்காலம் 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியமும் எட்டு மணி நேரத்திற்கு 560 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ஊர்க்காவல் படை என்பது அரசு பணி இல்லை எனவும் சொந்த விருப்பத்தின் பேரில் பணியாற்றுவது எனவும் தெரிவித்தார். அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பணி நாட்களை குறைத்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,டிச.3- தமிழகத்தில் தூத்துக்குடி, இராம நாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும். பிறகு மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி வடதமிழகம் - புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோ ரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும். தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தில் சிக்கி விசை படகு மூழ்கியது
சீர்காழி,டிச.3- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வான கிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனக்கு சொந்தமான விசை படகில் பாஸ்கர், இளைய ராஜா, பிரபு,மாணிக்கம் உள்ளிட்ட 4 மீனவர்கள் சனிக் கிழமையன்று (டிச.3) அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தி லிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பூம்புகார் துறைமுகத் திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்த ளித்தது. இதனால் நிலை தடுமாறிய விசைப் படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. இதனையடுத்து படகில் இருந்த 4 மீனவர் களும் கடலில் குதித்து தத் தளித்தனர். இதனை கண்ட சக மீனவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவ லின் பெயரில் வானகிரி மீன வர்கள், மாற்று படகுகள் மூலம் சென்று கடலில் மூழ்கிய 20 லட்சம் மதிப்பி லான விசை படகை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை
சென்னை,டிச.3- நெகழி பயன்பாட்டை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது. இது குறித்து மக்களி டையே பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரு கிறது. மேலும், அனைவரும் பயன் பெறும் வகையில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் 10 ரூபாய் செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ள லாம். அதுபோன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கட்டிடம் உள்ளிட்ட சுமார் 5 இடங்க ளில் இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறு வப்பட்டுள்ளது.
எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதில் அளிக்கத் தயார் - ரகுபதி
சென்னை,டிச.3- ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி யில், “ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப் பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியி டாததில் எந்தத் தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம். நாட்டிற்கே முன்மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆன்லைன் விளை யாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி ஒழுங்கு முறைகளையும் கொண்டு வரவுள்ளோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாத தற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.
பழங்குடியினர் ஆணையத்தை மதிக்காத நெல்லை எஸ்.பி-யை கைது செய்ய உத்தரவு
மதுரை, நவ.3- மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பழங் குடியினர் ஆணையம் திருநெல்வேலி மாவட் டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்ப வர் தன் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்த தாகவும், அதை மீட்டுத்தருமாறும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆணை யத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையம், காவல் கண்கா ணிப்பாளருக்கு அறிவுறுத்தி இருந்தது. ஜூன் 10-ஆம் தேதி அறிக்கை கேட்கப் பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் அதைப் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
இத னால் தொடர்ந்து அவகாசம் அளிக்கப்பட்டு வந்தது. அக்டோபர் 27, நவம்பர் 30 ஆகிய தேதிகளிலும் இதேபோல் ஆஜராக உத்தர விடப்பட்டு இருந்தது. ஆனால் அப்போதும் கண்காணிப்பாளர் ஆஜராகவில்லை. நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காமல், ஆஜராகாமல் இருக்கும் அதிகாரியின் நடவடிக்கை, ஆணையத்தின் உத்தரவுகள் தம்மைக் கட்டுப்படுத்தாது என அவர் கருது கிறார் போலும். ஆணையம் முன்பு ஆஜரா வது அவரது அந்தஸ்துக்கு ஏற்றதல்ல என் றும் அவர் கருதுவதாகவும் ஆணையம் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆஜர் ஆகாததோடு அறிக்கையும் தராமல் மாவட்ட கூடுதல் துணைக் கண்காணிப்பா ளரை அனுப்பி வைத்திருந்தார். இதனால் ஆணையம், ‘’திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனை கைது செய்து, வரும் 28-ஆம் தேதி ஆணை யத்தின் முன்பு ஆஜர்படுத்துமாறு தென் மண்டல ஐ.ஜிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.500 அபராதம் விதித்துள்ள ஆணையம், அந்த அபராதத்தை வசூ லிக்கும் பொறுப்பை திருநெல்வேலி ஆட்சி யர் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது. ஜாமீனில் விடக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆணையம் உத்தரவிட்டுள் ளது.
ஒரே வாரத்தில் 10 பேர் படுகொலை
இஸ்ரேல் அட்டூழியம்
ரமல்லா, டிச.3- மிகவும் அதிகமான படுகொலைகள் நடத்தப் பட்ட ஆண்டாக 2022 ஆம் ஆண்டு மாறியுள்ளது என்று பாலஸ்தீன தேசிய நிர்வாகத்தின் சுகாதா ரத்துறை கூறியிருக்கிறது. ஜெனின் முகாம் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் முகமது அஸ்ஸாதி மற்றும் நயிம் அல் சுபைதி ஆகிய இரண்டு இளைஞர்கள் கொல் லப்பட்டனர். படுமோசமான வன்முறைகள் 2006 ஆம் ஆண்டில் நிகழத் தொடங்கின. அப்போதி ருந்து கொலைவெறித் தாக்குதல்கள் தொடர் கதையாக மாறியுள்ள நிலையில், நடப்பாண்டில் தான் பெரும் அளவில் படுகொலைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பாலஸ்தீனி யர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் கொலை வெறி யாட்டத்திற்குப் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இஸ்ரேல் எதிர்ப்பு அமைப்புகளைத் தாக்குகி றோம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்க ளையும் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்கு தல் நடத்துகிறது. ஆக்கிரமிப்புப் பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் படுகொலைகளைத் தற்போதைய இஸ்ரேல் பிரதமர் நியாயப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இஸ்ரேல் மக்களைப் பாது காக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படு கின்றன என்று கூறும் அவர், பயங்கரவாதத்தை இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். இதுபோன்ற அரசு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை வாயைத் திறக்க மாட்டேனென்கிறது என்று பாலஸ்தீன அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
விலையை உயர்த்த விடாமலும், சிலிண்டர் மானியத்தை தராமலும் இழுத்தடிப்பு
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை ரூ.20 ஆயிரம் கோடி நஷ்டத்தில் தள்ளிய மோடி!
புதுதில்லி, டிச. 3 - பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நரேந்திர மோடி அரசு, அந்த சுமைகளை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தோளில் ஏற்றியது தெரியவந்துள்ளது. மேலும், எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தையும் வழங்காமல் பொதுத்துறை எண்ணெய் நிறு வனங்களை நஷ்டத்தில் தள்ளிவிட்டுள்ளது. இதையொட்டி, எண்ணெய் நிறுவனங்க ளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு, ஒன்றிய நிதிய மைச்சகத்திடம் இழப்பீடு கோருவதென பெட் ரோலிய அமைச்சகமே முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் கார ணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன்காரணமாக பண வீக்கம் அதிகரித்தாலும், இந்தியாவில் பெட் ரோல் - டீசல் விலை, கடந்த ஏப்ரலில் இருந்து சுமார் 200 நாட்களாக உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்தன. நடப்பு 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை யிலான முதலாவது அரையாண்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவ னங்கள் ரூ. 21 ஆயிரத்து 201 கோடியே 18 லட்சம் அளவிற்கு நிகர இழப்பைச் சந்தித்தன. ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகையை அரசு இன் னும் வழங்கவில்லை. அதையும் சோ்த்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த நஷ்டம் இன்னும் அதிகரிக்கும்” என்று கூறுகிறார்.
இந்நிலையிலேயே இந்த இழப்பை நிதியமைச்சகத்தை கேட்டுப் பெறுவதென பெட்ரோலிய அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. “பெட்ரோல் - டீசல் மீதான விலை உயர்த் தப்படாமல் இருந்ததால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால் பொருளாதா ரம் பெரும் பலனடைந்தது. ஆனால், அந்த முடி வால் பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்தி கரிப்பு நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்தன. இதனைக் கருத்தில்கொண்டு பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறு வனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம். சா்வதேச அளவில் கச்சா எண் ணெய் விலை குறைந்துள்ளபோதிலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் இழப்பையே சந்தித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு நிதி யிழப்பு ஏற்படும் என்பதை முழுமையாக கணித்து, அதன்பிறகு இழப்பீடு கோரி மத்திய நிதியமைச்சகத்தை நாட இருக்கிறோம்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டரை விநி யோகித்ததில் ஏற்பட்ட நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில் 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு கடந்த அக்டோபரில் ரூ. 22 ஆயிரம் கோடியை மட்டுமே வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தீக்கதிர் முக்கிய செய்திகள்
- தெற்கு அட்லாண்டிக் பகுதிகளில் சச்சரவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் போடப்பட்ட தீர்மானங்களை மீறும் வகையில் பிரிட்டனின் ராணுவம் நடந்து கொள்கிறது. மால்வினா தீவுகளில்(ஃபாக்லாந்து என்று பிரிட்டன் அழைக்கிறது) ராணுவப் பயிற்சி என்ற பிரிட்டனின் அறிவிப்பை அர்ஜெண்டினா கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தப் பயிற்சி பதற்றத்தை அதிகப்படுத்தும் என்றும் எச்சரித்தி ருக்கிறது.
- உக்ரைன் விவகாரம் மேலும் சிக்கலாகாமல் இருக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை, அமெரிக்க ஜனாதி பதியின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியபிறகுதான் இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரத்திற்கு அடிபணி யக்கூடிய எவரையும் லெபனானின் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஹெஸ்புல்லா அமைப்பு எச்ச ரித்துள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி களில் இருந்து நாட்டை விடுவிக்கக்கூடியவராக புதிய ஜனாதிபதி இருக்க வேண்டும் என்றும், உடனடியாக புதிய ஜனாதிபதி யைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தாங்கள் வலியுறுத்தி வருவ தாகக் கூறியிருக்கிறார்கள்.
- கொரோனா தொற்றால் பலி யான அரசு மருத்துவரின் மனை விக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து பரி சீலிக்க வேண்டும் என அரசு மருத் துவர் விவேகானந்தன் மனைவி திவ்யா தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அரசு உத்தரவா தப்படி வேலை வழங்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் அனுமதியும் அளித்துள்ளது.
- சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய நடைமேடையில் இரண்டு பெண்கள் உரிய ஆவ ணங்கள் இல்லாமல் வைத்தி ருந்த ரூ.51 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
- இந்தி கற்று தருவதாக கூறி தாய்லாந்து நாட்டை சேர்ந்த 23 வயது மாணவியை (ஹைதரா பாத் பல்கலைகழகத்தில் பயில் பவர்) மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த, ஹைதரா பாத் பல்கலைகழக பேராசிரியர் ரவி ரஞ்சன் கைது செய்யப்பட்டார்.
- மத்திய பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் காங்கிரஸ் யாத்தி ரையின் பொழுது ராகுல் காந்திக்கு கனஸ்யா கிராம அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷ் வில் மற்றும் அம்பு பரிசளித்தார். இதை கண்டு எரிச்சலடைந்த ஆளும் பாஜக அரசு ராஜேஷை சஸ்பெண்ட் செய்தது.
- இமாசலப்பிரதேச மாநிலம் சாம்பா மற்றும் அதன் சுற்றுவட் டார மாவட்டங்களில் நில நடுக்கமானது வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது. சாம்பா மாவட்டத்தின் திஸ்ஸா பகுதிக்கு அருகில் உள்ள தார் மக்கான் என்ற இடத்தில் ஏற்பட்டதாகப் பேரிடர் மேலாண்மை சிறப்பு செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்துள்ளார். சில விநாடி கள் நீடித்த இந்த நிலநடுக்கத் தால் உயிரிழப்போ, உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.