சென்னை, அக். 10 - ‘நியூஸ் கிளிக்’ மற்றும் ஊடகங்கள் மீதான ஒன்றிய பாஜக அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் (மிண்ட்) எதிரில், புதனன்று மாலை 5 மணியளவில் நடை பெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி, திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொருளாளர் மு. செந்திலதி பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ரவிகுமார் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலை வர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலை வர் தி. வேல்முருகன் எம்எல்ஏ, கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செய லாளர் இ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கண்டன உரை முழங்குகின்றனர். தமிழ்நாட்டின் மூத்த பத்திரி கை யாளர்கள், ஊடகவிய லாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்க நிர்வா கிகளும் கலந்து கொள்கின்றனர்.