states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பிரதமர் மோடி ஜூன் 26-இல் ஜெர்மனி புறப்படுகிறார்

ஜெர்மனி ஜனாதிபதி ஓலாப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் ‘ஜி7’ மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஜூன் 26, 27 தேதிகளில் ஜெர்மனி செல்கிறார். சுற்றுச்சூழல், பருவநிலை, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், சர்வதேச உறவு ஆகி யவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இந்த பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 28 அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அங்கு அந்த நாட்டின் மறைந்த தலைவர் ஷேக் காலிபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிக்கிறார்.

மேகதாது: கர்நாடகத்தின் சுற்றுச்சூழல் விண்ணப்பம் நீக்கம்! 

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கு சுற்றுச்சுழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை கர்நாடக அரசு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், கர்நாடக அரசின் அந்த விண்ணப்பத்தை ஒன்றிய சுற்றுச்சுழல் துறை அமைச்சகம் பரிசீலனையில் இருந்து நீக்கியுள்ளது.

அமலாக்கப்பிரிவிடம் அவகாசம் கோரும் சோனியா காந்தி

நேசனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி யால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. சிகிச்சை முடிந்து சோனியா காந்தி வீட்டிற்குத் திரும்பிய நிலையில், ஜூன் 23 ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி யிருந்தது. ஆனால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் உடல்நிலை சீராக இல்லாத தால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத் துறையிடம் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

பாஜக வேட்பாளர் முர்முவுக்கு நிதிஷ்குமார் ஆதரவு!

இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு-வை பாஜக தனது வேட்பாளராக அறிவித்தது. இந்நிலை யில், முர்மு-வுக்கு, பாஜக கூட்டணியிலுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டின் உயரிய பதவிக்கு பழங்குடியினப் பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அக்னிபாதைக்கு எதிராக ஜூன் 27- காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

ராணுவத்திற்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ஆளெடுக்கும் ‘அக்னி பாதை’ என்ற திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு, கடந்த ஜூன் 14 அன்று அறிவித்தது. இதற்கு எதிராக தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு,  காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனுவும் அளித்தனர். இந்நிலையில், அடுத்தகட்டமாக ஜூன் 27 அன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

புதிதாக 200 விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா?

அரசுத்துறையில் இருந்த ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தை, நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு நஷ்டக் கணக்கு காட்டி, பெருமுதலாளி ‘டாடா’விற்கு ரூ. 18 ஆயிரம் கோடி என்ற அடிமாட்டு விலைக்கு விற்றது. அரசாங்கத்தால் நடத்த முடியவில்லை என்று கூறிய அந்த ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தை வாங்கிய முதலாளி டாடா, தற்போது தொழிலை விரிவுபடுத்தும் வகையில், புதிதாக 200 விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் ‘போயிங்’, ‘ஏர் பஸ்’ நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அரசு வசமிருந்தபோது, கடந்த 16 ஆண்டுகளில் ‘ஏர் இந்தியா’வுக்கு புதிதாக ஒரு விமானம் கூட வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூன் 22- தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் வியாழக்கிழமை (ஜூன் 23) ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஜூன் 24 முதல் 25 ஆம் தேதி வரைக்கும் ஒருசில இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஜூன் 23ஆம் தேதி வடக்கு கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 24, 25, 26 ஆகிய தேதிகளில் லட்சத்தீவு பகுதி, கேரளா  - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்  கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்று 21 விழுக்காடு அதிகரிப்பு

சென்னை, ஜூன் 22- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், பிஏ5 தொற்று வகை 25  விழுக்காடு வரை பரவி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 21 ஆம் தேதி  நிலவரப்படி புதிதாக 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 34,62,297 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,366 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுவரை 38,026 பேர் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள் ளனர். சமீப நாட்களாக தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள் ளப்படும் மரபணு பகுப்பாய்வை அதிகப் படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை திட்ட மிட்டுள்ளது. அதேபோல அதிகரித்துவரும் பிஏ5 தொற்று வகை பாதிப்பை தடுக்க மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே பிஏ5 வகை கொரோனா பரவலை தடுக்க லாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி யுள்ளது. தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை யில்தான் தொற்று பாதிப்பு அதிகம் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஒலிம்பியாட்:  தடையில்லா மின்சாரம்

மாமல்லபுரம், ஜூன் 22- மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வதேச “செஸ் ஒலிம்பி யாட்” போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து போட்டி நடைபெறும் அரங்கின் வடபகுதியில் இருந்த திறந்த வெளி கார் நிறுத்தம் பகுதியை, அரங்க மாக மாற்றிக் கொடுக்க அரசு ஒப்புக் கொண்டது. உடனடியாக அங்கிருந்த மரங்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து பிரமாண்டமான தற்காலிக விளை யாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தது. இந்நிலையில் புதிய அரங்கத்திற்கு தேவையான மின்சாரம் வசதிகள் தங்களிடம் இல்லை என அரங்கத்தின் நிர்வாகம் கூறியதால். தமிழக மின் வாரியம்  ஆலத்தூர், பூஞ்சேரி துணை மின் நிலையங்களின் உயர் அழுத்த மின் தடத்தில் அரங்கம் அருகே புதிய டிரான்ஸ்பார்ம் அமைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் மின் தடங்கல் வராத வகையில், மின் தட வயர்களில் புதிய பாலிமர் இன்சுலேட்டர்களும் பொறுத்தப்பட்டது. 

நாங்கள் தான் உண்மையான அதிமுக: ஓ.பி.எஸ்

சென்னை,ஜூன் 22-  அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்து உள்ள நிலையில், ஓ.பனீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவு கிறது.  இந்த நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வானகரத்தில் திட்ட மிட்டபடி நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.  இதற்கிடையில், அதிமுக இணை  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல் வம் தனது டிவிட்டர் பக்கத்தில் “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்;  தருமம் மறுபடியும் வெல்லும்” என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளர் வைத்தியலிங்கம், “பொதுக்குழுவில் தீர்மான திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட பின்பே அதுகுறித்து தேர்தல் ஆணை யத்தில் முறையிடுவோம். இப்போ தைக்கு செல்ல மாட்டோம். உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு செல் வோம். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறினார்.