சென்னை, மே 21- தமிழ்நாடு முழுவதும் திங்கட் கிழமை (மே 22) பட்டதாரி ஆசிரி யர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒன்றியத்துக்குள் மாறுதல் பெற்று செல்ல விரும்பும் பட்டதாரி ஆசிரி யர்களுக்கு இந்த மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலை யில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்க ளுக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 19-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டு திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.