புதுக்கோட்டை, மே 20- பொற்பனைக்கோட்டை அக ழாய்வு முடிவு தமிழனின் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வர லாற்றை எடுத்துரைப்பதாக இருக் கக்கூடும் என்றார் நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. வரலாற்றுச் சிறப்புமிக்க பொற் பனைக் கோட்டையானது 17.75.66 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 1.26 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப் பகுதியும் அமைந்துள்ளது. இது இரும்பு காலத்தில் தொடங்கி பிற்காலம் வரை தொடர்கிறது. இரும்புக்கால ஈமச்சின் னங்கள், கருப்பு சிவப்பு பானை ஓடு கள், வரலாற்றுக்கு முந்தைய செங்கற் கள் கண்டறியப்பட்டன. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 2021-ஆம் ஆண்டு முனைவர் இனி யன் தலைமையில் அகழாய்வு மேற் கொள்ளப்பட்டது. தமிழி எழுத்து பொறிப்புகளைக்கொண்ட பானை ஓடுகள், சதுரங்க ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள், எலும்பு ஆயு தங்கள் மற்றும் வட்டச்சில்லுகள் கண்ட றியப்பட்டன. பொற்பனைக்கோட்டை தொல்லி யல் அகழாய்வுப் பணியினை, நிதி, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை) வை.முத்துராஜா (புதுக்கோட்டை) மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தொல்லியல் துறை இயக்குநர் சே.ரா.காந்தி, கோட் டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, இணை இயக்குநர் இரா.சிவானந் தம், தொல்லியல் ஆலோசகர் பேராசிரி யர் க.ராஜன், பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை, வட்டாட்சியர் விஸ்வநாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற பகுதிகளில் அகழாய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொற்பனைக்கோட்டையில் தொல்லி யல் துறை மூலமாக அகழாய்வு பணிக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். பல்வேறு இடங்களில் அகழாய்வு நடந்தாலும் பொற்பனைக்கோட்டை அகழாய்வு என்பது வரலாற்றில் முக்கி யத்துவமானது. சங்க கால வாழ்விடப் பகுதிகளாக இருக்கக்கூடிய பல இடங்களில் ஆய்வுகளை மேற் கொண்டு இருக்கின்றோம். அவை தொழில், வாணிப ரீதியாக தமிழர்களு டைய தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. பெரும் கோட்டை கொத்தளங்களோடு இருக்கக்கூடிய ஒரு பகுதியில் இந்த அகழாய்வு மேற் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பொற்பனைக்கோட்டையின் கர்ப்பப் பகுதியில் இந்த ஆய்வுகள் நடக்க உள்ளன. மக்கள் எந்த அள விற்கு நாகரிகம் படைத்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஒரு அரசாட்சி யோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்ப தற்கு ஆதாரமாக அகழாய்வு முடிவு கள் இருக்கும். இரும்புக் காலத்திலிருந்து இங்கு இருந்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக இரும்புக் குழாய்கள் சுடுமண், சாம்பல் நிற பானைகள், கருப்பு சிவப்பு ஓடு கள் மற்றும் இங்கு கிடைக்கக் கூடிய பொருட்கள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்தப் பகுதி யுடைய தொன்மை ஏறத்தாழ 3 ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளதாக இருக்கக்கூடும். இந்தியாவின் வரலாறு காவிரி, வைகை கரையில் இருந்து, தமிழ்நாட் டின் பிற பகுதிகளில் இருந்து எழு தப்பட வேண்டும். அறிவியல் பூர்வ மாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூ பிக்கப்பட்ட தொன்மையானது தமிழ் மொழி. தொல்லியல் அகழ்வாய்வுக்கு தேவையான நிதியும் தடையின்றி ஒதுக்கப்பட்டு வருகிறது என்றார்.