ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
ராய்கட், ஏப்.17- ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில், வெப்ப அலை தாக்கி 13 பேர் செத்து மடிந்த கொடுமை நடந்துள்ளது. மேலும், பலர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ள நிலையில், இறந்தவர்களுக்கு மகா ராஷ்டிர பாஜக கூட்டணி அரசு, அவசர அவசரமாக ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் அப்பா சாகேப் தர்மாதிகாரிக்கு ‘மகா ராஷ்டிர பூஷண்’ விருது (maharashtra bhushan award) வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அமைச்சர் கபில் பாட்டீல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தர்மாதி காரிக்கு விருதை வழங்கி, அவருக்குச் சால்வை, பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுப் பரிசு மற்றும் 25 லட்சம் ரூபாய் மற்றும் 10 அடி ரோஜா மலர் மாலை யை அமித்ஷா வழங்கினார். இதையொட்டி பாஜக-வினர் நவிமும்பையில் உள்ள மைதானத்தில் பல ஆயிரக்கணக்கானோரை கூட்டி வைத்திருந்தனர். மேடை நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதி களை எல்லாம் செய்திருந்த மகாராஷ்டிர அரசு, வெயிலை மறைப்பதற்கான பந்தல் அமைக்காமல், மக்களை வெயிலில் காய விட்டது. காலை 11.30 மணிக்குத்தான் பரிசளிப்பு விழா துவங்கியது
என்றாலும், அதற்கும் முன்னதாகவே மைதானத்திற்கு மக்கள் வந்து விட்டனர். பிற்பகல் 2 மணி வரை விழா நடைபெற்ற நிலையில், அவ்வ ளவு நேரமும் வெயிலிலேயே காய்ந்தனர். இந்த வெயி லின் அளவானது 38 டிகிரி செல்சியஸ் வரை இருந்த தால், மைதானமே கடும் வெப்ப அலையில் சிக்கியது. இதனைத் தாள முடியாத பலரும் மயங்கி சுருண்டு விழுந்தனர். மொத்தம் 123 பேர் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 13 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். மேலும் பலர் ஆபத் தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத னால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. இதனிடையே, மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரி ழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறி வித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த உத்தவ் தாக்கரே, “இந்த சம்ப வத்திற்கு யார் பொறுப்பேற்பது..? இந்த விவகாரத்தை யார் விசாரணை நடத்துவது?” என்று கேள்வி எழுப்பி யதுடன், “நிகழ்ச்சியை ஒழுங்காக திட்டமிடாததே இந்த விபத்திற்கு காரணம்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.