சென்னை,அக்.19- தமிழ்நாட்டில் தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் மூன்று மாதம் சிறை தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டமசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி னார். அந்த சட்டமசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- குடிமக்களை சூதாட்டத்தின் விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.ஆன்லைன் சூதாட்டம் மக்களின் மனநலத்தை பாதிப்பதோடு தனிப் பட்ட, குடும்ப, சமூக, தொழில் மற்றும் பொதுமக்களின் செயல்பாட்டின் பிற முக்கியப்பகுதிகளில் பாதிப்பை உருவாக்குகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களின் நுண்ணறிவுப்பலம், எழுதும் திறன் மற்றும் படைப்பா ற்றல் ஆகியவை குறைகின்றன. ஆன்லைன் விளையாட்டுக்களின் மூலம் இளைஞர்களிடையே ஆக்ரோசமான நடத்தையும், கண்பார்வை பாதிப்பு, சிந்தனைத் திறன், உற்பத்தித்திறன் குறைதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மட்டுமில்லாமல் குடும்பங்களின் அழிவுக்கும், தற்கொலை மரணங்களுக்கும் காரணமாகின்றன. மக்களின் உடல் நலத்தை மட்டுமல்லாமல் சமூக ஒழுங்கையும், பொது ஒழுங்கை யும் சீர்குலைக்கிறது என்று நீதிபதி சந்துரு தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படுதல் அவசியம் என்றும், சட்டத்தை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடத்துகிற வர்களுக்கு மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 ஆயி ரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஊடகங்களில் விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்து தண்டிக்கப்படுவர். இரண்டாவது முறையாக அக்குற்றத்தை செய்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்ட னையும் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும், என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த சட்டமசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா புதனன்று(அக்.19)குரல் வாக்கெடுப்பின் மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.