சென்னை,செப்.22- தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வியாழனன்று (செப்.22) தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் மொத்தம் 4,328 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளுக்கு ரூ.13, 610, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு 1 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 170 இடங்கள் உள்ளன. இதில் சேரும் மாணவர்களுக்கு ரூ.11,610 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு குழு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங் களில் சேருவதற்கான மாணவர்கள் வியாழ னன்று (செப். 22) முதல் 3 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.