states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காயம் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டிருந்த தடை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள  ரபாலேயில் உள்ள சாவண்டா ஆய் காம்தேவி கோவிலின் உண்டியலை உடைத்து ரூ.49,000 காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 

பீகார் மாநிலம், லக்சிசராய் மாவட்டத்தின் தேசிய  நெடுஞ்சாலையில் ஆட்டோ - லாரி மோதிய  விபத்தில், ஆட்டோவில் பயணித்த 8 பேர் உயி ரிழந்த நிலையில், 6 பேர் படுகாயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் லோனார் தாலுகாவில் பாரம்பரியமாக நடைபெறும் “ஹரினம் சப்தா” என்ற மதவழிபாட்டு நிகழ்வில் வழங்கப் பட்ட பிரசாதத்தை உட்கொண்ட 600க்கும் மேற்  பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  வாந்தி மயக்கம் ஏற்பட்ட 300 பேருக்கு சாலையில்  படுக்க வைத்து சிகிச்சையளித்த அவலம் அரங்கேறி யுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்த புரம் எம்பியுமான சசி தரூருக்கு பிரான்ஸ்  நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின்  திஜாரா கைர்தல் மாவட்டம் கிஸ்நகர் பாஸ்  கிராமத்தில்  மாட்டிறைச்சி விற்ற குற்றச்சாட்டின் பேரில் 12 வீடுகளை அதிகாரிகள் இடித்துள்ளனர். மேலும் 22 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பையை வெல்லும் அணிக்கு ஒரு  கோடி ரூபாயும், வீரர்களுக்கு தலா ஒரு பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என்று ஹைதரா பாத் கிரிக்கெட் சம்மேளன தலைவர் ஜெகன் மோகன் ராவ் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வெஞ்சாமரமூடு பகுதியைச் சேர்ந்த நயாஸின் மனைவி சமீரா பீவிக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில், தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு கம்பெனி களில் கன்னடர்கள் எத்தனை பேர் பணிபுரி கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் காட்சிப்  பலகை வைக்க வேண்டும் என்று அம்மாநில கலாச்  சார அமைச்சர் சிவராஜ் தங்கடகி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் மிகப்பெரும் போதைப்பொருள் கைப்பற்றல் நடவடிக்கையாக, ரூ.3 ஆயி ரம் கோடிக்கும் மேலான மதிப்புள்ள போதை பொருட்களை தில்லி மற்றும் புனே போலீசார் கடந்த  2 தினங்களில் கைப்பற்றி (தனிதனி சோதனை யில்) உள்ளனர்.