states

மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மீதே எனது முழு கவனம்: முதல்வர்

சென்னை, ஜூலை 13- இந்திய குடிமைப்பணி தேர்வில் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 33 பேர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 13 அன்று சென்னை தலைமைச் செயல கத்திற்கு அழைத்து பாராட்டினார். அப்போது முதலமைச்சர் உரையாற்றும் போது கூறியதாவது:- உங்கள் முகங்களை பார்க்கும் போது கிராமப்புற முகங்களும் தென்படுகிறது. உங்கள் குடும்பத்தை சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரியா கவும் நீங்கள் இருக்கலாம். நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களா கவும் இருக்கலாம். உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது இந்த  இடத்துக்கு உங்களை உயர்த்தியவர் கள் வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். எப்போதும் உயர்ந்த பதவி என்பது அதை விட பன்மடங்கு கடமையும் பொறுப்பும் உள்ளடக்கியது என்பது தான் உண்மை. இந்த நாட்டின் எளிய மக்கள் குறிப்பாக கிராமப்புற பகுதி மக்களின் வாழ்வானது அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் தான் மேம்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் 1000  ரூபாய் தர இருக்கிறோம். மகளிருக்கு  பொருளாதார வலிமை ஏற்படுத்தும்  திட்டமாக இதனை வடிவமைத் துள்ளோம். யாருக்கெல்லாம் இது  கிடைக்கும் என்று கேட்டபோது யாருக் கெல்லாம் 1000 ரூபாய் அவசியத்  தேவையோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும் என்று நான் சொன்னேன். திட்டத்தை இப்போதே அறிவித்து விட்டோம். செப்டம்பர் மாதம் 15 ஆம்  தான் வழங்கப் போகிறோம். இதற்கிடையே வருகின்ற அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று எந்த சிக்கலும் இல்லாமல், அதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். என்னுடைய முழு கவனம் இப்போது இதில் தான் இருக்கிறது. உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறை வேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மக்களிடம் கனிவாகப் பழகுங்கள். அவர்கள்தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள். அவர்க ளிடம் தான் முதலில் நீங்கள் நற்பெயர்  எடுக்க வேண்டும். இதை நீங்கள் எப்போ தும் கவனத்தில் கொள்ள வேண்டும். அகில இந்திய தேர்வை சிறப்பாக  எதிர்கொண்ட நீங்கள் அடுத்து வரும் உங்கள் பயிற்சி காலத்தையும் மிக சிறப்பாக நிறைவு செய்வீர்கள் என்று  நான் நம்புகிறேன்.பல்வேறு பணிகளில் பிற்காலங்களில் பொறுப்பேற்க போகும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் பணிகளில் நமது தமிழ்நாடு, உங்கள் குடும்பமும் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.