கொச்சி, மார்ச் 8- நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் பான்மை இருந்தும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மோடி அரசு கொண்டு வரா தது பெண் சமுதாயத்திற்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறினார். மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பின் ஒரு பகுதியாக கொச்சியில் புதனன்று (மார்ச் 8) நடந்த செய்தியாளர் சந்திப்பில் எம்.வி.கோவிந்தன் மேலும் கூறியதாவது: 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு களில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில், அரசமைப்பு திருத்தத்தின் கீழ் நாடாளு மன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தி ருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகும் 29 நாடாளுமன்ற கூட்டங்களுக்குப் பிறகும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய தயாராக இல்லை. நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் உகந்த அரசுகளில் ஒன்றாகவும், பெண் களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசாகவும் கேரளாவில் உள்ள எல்.டி.எஃப் அரசு திகழ் கிறது. நலிந்த பிரிவினரை அரவணைக்கும் கொள்கையை பினராயி விஜயன் அரசு கடைப்பிடித்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புத் துறை உரு வாக்கப்படுவது பெண்களின் முன்னேற்றத் துக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உலக நாடுகளின் நாடாளுமன்றங்க ளில் பெண்களின் சராசரி பிரதிநிதித்துவம் 26 சதவீதமாக இருந்தாலும், இந்தியாவில் அது 15 சதவீதமாக மட்டுமே உள்ளது. உல களாவிய பாலின இடைவெளி அறிக்கை யின்படி, 156 நாடுகளில் இந்தியா 140 ஆவது இடத்தில் உள்ளது. பெண் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியா 142 ஆவது இடத்தில் உள்ளது. ஆர்எஸ்எஸ் பின்பற்றும் ஆணாதிக்கக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை பாஜகவால் கொண்டு வர முடியவில்லை. பெண்க ளுக்கு ஒருபோதும் சுதந்திரம் வழங்கக் கூடாது என்று கூறும் மனுஸ்மிருதியை இந்திய அரசியலமைப்புச் சட்டமாக கொண்டு வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கோருகின்றனர். ஒரு பெண்ணை குடியரசு தலைவராக்கி னாலும், அதன் பெயரால் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வராத தற்கும் எந்த நியாயமும் கூற முடியாது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா வை மோடி அரசு கொண்டு வந்தால், இடது சாரி கட்சிகள் அதை ஆதரிக்கும். இதற்கு காங்கிரசும் ஆதரவாக உள்ளது. இன்னும் ஏன் மோடி அரசு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வரவில்லை. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால் நிலைமை வேறு. தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் 53 சதவீத மாக உள்ளது. 1200 உள்ளாட்சி அமைப்பு களில் 602 பெண்களே தலைமை வகிக் கின்றனர். 941 கிராம பஞ்சாயத்துகளில் 471, 152 பிளாக் பஞ்சாயத்துகளில் 77, 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஏழு, 87 முனிசிபல் கவுன்சில்களில் 44 மற்றும் 6 மாநகராட்சிகளில் மூன்று பெண்கள் தலைமை வகிக்கின்றனர். மாநில அமைச்ச ரவையில் மூன்று பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
மாநிலத்தில் பாலின வரவு-செலவுத் திட்டம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பெண் களின் சிறப்பு மேம்பாட்டுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட திட்டத்தின் விகிதம் 11.5 சத வீதத்தில் இருந்து 19.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடலோர மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வலியுறுத்தி, மகளிர் கொள்கையை புதுப்பிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொள்கை யை புதுப்பிப்பதற்கான செயல்பாடுகளுக் காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள 11 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் துவக்கப்பட்டுள்ளது.
வீட்டு வேலைகளின் மதிப்பை அங்கீ கரித்து இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. காவல்துறையில் பெண்களின் பங்க ளிப்பு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள் ளது. பெண் கமாண்டோக்கள் உருவாக்கப்பட்ட னர். மகளிர் படையணியும் (பட்டாலியன்) தொடங்கப்பட்டது. கலால், தீயணைப்புப் படை, வனப் பாதுகாப்பு போன்ற சீருடைப் பணிகளில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். பாலின பூங்கா மற்றும் நிர்பயா திட்டங்க ளும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மக ளிர் காவல் நிலையம், மகளிர் பிரிவு, அப ராஜிதா, பிங்க் போலீஸ், நிஜல், மகளிர் தற்காப்புக் குழு, மகளிர் பீட் ஆகிய அனைத்தும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள். பணியிட துன்புறுத்தலை முடி வுக்குக் கொண்டுவர அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழு அமைக் கப்பட்டுள்ளது. பெண்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்வதற்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கான சட்டம் மற்றும் மறுஆய்வு நடவடிக்கைக்கான சிறப்பு ஒதுக்கீடு சேர்க்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் நிதி தன்னிறைவு அடைய உத வும் குடும்பஸ்ரீ திட்டத்தை எல்.டி.எப் அரசு மிகவும் திறம்பட செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் குடும்பஸ்ரீக்கு சிறப்புத் தொகை ஒதுக்கப்படுகிறது. இந்த வருடம் 260 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.