புதுதில்லி, அக். 18 - இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இமாசல பிர தேசத்திற்கு மட்டும் நவம்பர் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறி வித்து விட்டு, குஜராத்திற்கான தேர்தல் தேதியை வெளியிடவில்லை. இது தொடர்பாக கேட்டபோது, இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையும் தேதியில் இருந்து 40 நாட்கள் கழித்தே குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடி வடைவதால் இரு மாநில சட்டப்பேர வைத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்துவதில் விதிப்படி தவறில்லை” என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். அப்போது, குஜராத் தேர்தலை யொட்டி பல்வேறு இலவச சலுகை களை வெளியிட பாஜக திட்டமிட்டுள் ளது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப் பிலான புதிய திட்டங்களை அறிவிக்க வுள்ளார். இதற்காக அக்டோபர் 19-ஆம் தேதி பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தீர்மா னித்துள்ளார். எனவேதான், குஜராத் திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு ஒத்திப் போடப்பட்டு உள்ளது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின.
தேர்தல் ஆணையம் மோடி அரசின் கட்டுப்பா ட்டில் சென்றுவிட்டதாகவும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இத னை ஆளும் பாஜக-வினரும், தேர்தல் ஆணைய வட்டாரங்களும் மறுத்தன.ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச் சாட்டுகளே தற்போது உண்மையாகி இருக்கின்றன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு, ஆண்டுக்கு 2 சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற இலவச சலுகை அறிவிப்பை குஜராத் பாஜக அரசு திங்களன்று வெளியிட்டது. அதுமட்டு மல்லாமல், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரி வாயு சிலிண்டர்கள் மீதான வாட் வரியையும் 10 சதவிகிதம் குறைத்தது. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 19 முதல் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்களுக்கு குஜராத்தில் காந்திநகர், ஜுகநாத், ராஜ்கோட், கேவடியா மற்றும் வியாரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தாகவும், இந்த சுற்றுப்பயணத் தின் போது ரூ. 15 ஆயிரத்து 670 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள தாகவும் பிரதமர் அலுவலகம் தெரி வித்துள்ளது.