புதுதில்லி, ஏப்.17- ஒரே பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கலாமா, வேண் டாமா? என்ற விவகாரத்தை, நாடாளு மன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண் டும்; இந்தப் பிரச்சனையை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்று ஒன்றிய பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறி யுள்ளது. மேலும், ‘’ஒரே பாலினத் திருமணங் களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது நகர்ப்புற மேல் தட்டுப் பார்வை” என்றும், “இந்த வகை யிலான திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் நீதிமன்றம் ஒரு புதிய சமூக நிறு வனத்தை உருவாக்க முயலக்கூடாது” என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. ஒரே பாலினத் திருமணங்களை, சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி இரண்டு ஒரேபாலின தம்பதிகள் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர். “திருமணத்துக்கான இணையரை தேர்வு செய்யும் உரிமை எல்.ஜி.பி.டி.க்யூ. (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer or Questioning persons or the community - LGBTQ) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்; ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமைக்கும், வாழ்வுரிமைக்கும் எதிரா னது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14, 21-ஐ மீறுவதாகும். எனவே தன்பாலின உறவாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்” என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டி ருந்தனர்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தனது தலை மையில் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ். நர சிம்மா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வை அமைத்தார். இந்த அமர்வு ஏப்ரல் 18 முதல், தன் பாலி னத் திருமணம் தொடர்பான வழக்கு களை விசாரிக்கும் என்றும் அறிவித்தார். வழக்கமாக, ஒரு அமர்வில் இணை நீதிபதியாக, இரண்டாவது மூத்த நீதி பதி நியமிக்கப்படமாட்டார். ஆனால், தலைமை நீதிபதிக்கு அடுத்து, தற் போது உச்சநீதிமன்றத்தின் இரண்டா வது மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சய் கிஷன் கவுலை, வழக்கின் முக்கியத்து வம் கருதி இந்த அரசியல் சாசன அமர் வில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இணைத்தார். இந்த அமர்வு செவ்வாய்க்கிழமை முதல் வழக்கை விசாரிக்க உள்ளது. இதையொட்டித்தான், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, தன்பாலினத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தில் தங்களின் நிலைபாடு என்ன? என்பது குறித்து பிரமாணப் பத்திரம் ஒன்றை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ளது.
அதில், “தற்போது திருமணம் என் பது சட்டத்தின்படியும், மதத்தின்படியும் புனிதமான ஒன்றாக, பன்முகத்தன்மை கொண்ட அமைப்பாக உள்ளது. ஒரே பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகா ரம் அளிக்கப்பட்டால் அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும். ஒரே பாலினத் திருமணங் களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதி மன்றம் முயலக்கூடாது. நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற ‘வேறு வகை’ திருமணங்களை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்றுக் கொள்வதா வேண்டாமா? என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். நகர்ப்புற மேல்தட்டு பார்வையுடன் கூடிய மனுக்கள் தாக்கல் செய்யப் படும்போது, அந்த மனுக்களின் அடிப்ப டையில் மட்டுமே நீதிமன்றம் தீர்ப்ப ளிக்கும். கிராமப்புற மக்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் மக்களின் கருத்துக்கள், அவர்களின் குரல்கள், மதப் பிரிவுகள், தனிப்பட்ட சட்டங் கள், பழக்கவழக்கங்கள், மற்ற திரு மண முறைகள் மீது ஒரே பாலின திரு மணம் ஏற்படுத்தும் விளைவுகள் என விரிந்த பார்வையில் இதனைப் பார்க்க வேண்டும். தனி நபரின் விருப்ப உரிமை என்ற வகையில், ஒரே பாலினத் திரு மணத்தை அங்கீகரிப்பதற்கான உரிமை இல்லை. இது அடிப்படை உரிமையா காது” என்று குறிப்பிட்டுள்ளது.