states

மனைவி, மகள்களைத் தொடர்ந்து மகன் தேஜஸ்விக்கும் சம்மன்

பாட்னா, மார்ச் 11- ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், கடந்த 2004 முதல் 2009 வரை,  ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வேயில் வேலை வழங்க, சிலரிடம் குறைந்த விலைக்கு அவர்களின் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு சிபிஐ குற்றச்சாட்டு பதிவு  செய்தது.  லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா உள்ளிட்ட மொத்தம் 12 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றன. அதன்பின்னர் 2022 ஜூலையில், லாலுவின் உதவியாளர் மற்றும் முன்னாள் சிறப்பு பணி அதிகாரியான போலா யாதவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குற்றச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் 6-ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் லாலு வின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா  பாரதி, ஹேமா உள்ளிட்டோரின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரி கள், ராப்ரி தேவியிடம் விசாரணை நடத்தினர்.  மார்ச் 7-ஆம் தேதி தில்லியில் இருக்கும் லாலு விடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தி னர்.

இதுதொடர்பான பரபரப்பு அடங்குவ தற்கு உள்ளாகவே, சிபிஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் தனது பங்கிற்கு லாலு குடும்பத்தை குறிவைத்தது. லாலுவின் மகள்களான ரோகிணி யாதவ்,  சந்தா யாதவ், ஹேமா யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ  அபு டோஜனாவின் பாட்னா வீடு, புல்வாரி  ஷெரிப்பின் வீடு என சுமார் 50 இடங்களில்  அமலாக்கத்துறையினர் வெள்ளிக்கிழமை யன்று சோதனை நடத்தியது. லாலுவின் மக னும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி  வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ரூ. 70 லட்சம் ரூபாய் அள விற்கு கணக்கில் வராத பணமும், தங்க நகை களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், லாலு மீதான நிலமோசடி வழக்கில் மார்ச் 15 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தேஜஸ்வி-க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, பிப்ர வரி 4 அன்று அனுப்பிய சம்மனுக்கு தேஜஸ்வி  ஆஜராகவில்லை என்பதால், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் ஒன்றிய அரசின் அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி கடந்த வாரம்தான் 8 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தன. அந்தக் கடிதத்தில் லாலுவின் மகன் தேஜஸ்வியும் கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில் தான், சிபிஐ, அமலாக்கத்துறை என மத்திய  விசாரணை அமைப்புக்கள் லாலுபிரசாத் குடும்பத்திற்கு எதிராகவும் ரெய்டில் இறங்கி, தேஜஸ்விக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.