states

இந்தாண்டு வருவாய் இலக்கு ரூ 25,000 கோடி

சென்னை, ஜூன் 8- பதிவுத் துறையில் இடைத் தரகர்களை அனு மதிக்கக்கூடாது, உரிமை யாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் விருகம்பாக்கம், கோடம் பாக்கம் பதிவுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், “பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பத்திரங்களை விரை வில் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது” என்றார். நடப்பாண்டிற்கு 25,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பதிவு செய்யும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். பத்திரப்பதிவுத் துறை யில் ஸ்டார் 3.0 என்ற மென் பொருள் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவுத் துறையில் உள்ள குறை பாடுகள் களையப்படும். பதிவுத்துறையில் இடைத் தரகர்களை அனுமதிக்க கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய  வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.