states

மயிலாடுதுறை காவல்துறையின் தாக்குதல்: விவசாயத் தொழிலாளர்கள் கண்டனம்

கைது செய்துள்ள தலைவர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உடன் விடுதலை செய்திட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

 சென்னை, ஜூன் 27- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மூன்று போக சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இருந்தும், விவசாயக் கூலித் தொழிலா ளர்களுக்கு வேலை தராமல் நேரடி விதைப்பில் ஈடுபட்ட செயலைத் தடுத்து நிறுத்தச் சென்ற தலைவர்கள் மீது தடியடி, தாக்குதலில் ஈடுபட்டுக் கைது செய்துள்ள மயிலாடுதுறை மாவட்டம்- பாலையூர் காவல்துறை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் பாலையூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தப் பகுதியில் முறையான பாசனக் கட்ட மைப்பும் - மூன்று போக சாகுபடிக்குத் தேவை யான தண்ணீரும் போதிய அளவில் கிடைக்கிறது. போதிய ஆட்களும், தண்ணீரும் விவ சாயப் பணிகளை மேற்கொள்ள கிடைக்கும் போது, வேண்டுமென்ற சில விவசாயிகள் விவ சாயக்கூலித் தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக, தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சாகுபடி முறையான நேரடி விதைப்பில் ஈடுபட முயற்சித்தனர். பாரம் பரியமாக மேற்கொள்ளும் விவசாய முறையை வேண்டுமென்றே மாற்றி விவசாயக் கூலித் தொழிலாளர்களை வஞ்சிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் - விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் கடந்த 15 நாட்களாக ஆட்சேபித்து வருகிறது.

கடந்த 16.6.2022 அன்று இது தொடர்பாக மயிலாடுதுறை வருவாய் கோட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாயத் தொழிலாளர்கள் சார்பில், வேலை வழங்கிடும் வகையில் நேரடி விதைப்பதை கைவிட்டு நாற்று பயிர் செய்து சாகுபடி பணியை வழக்கம்போல் தொடர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில விவசாயிகள் உடன்படாததால் வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தைக்குப் பரிந்துரை செய்வதாக அறிவித்து பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று முதல் (26.6.2022) மயிலாடுதுறை மாவட்டம் முழுவ துமிருந்து, மயிலாடுதுறை துணை கண்காணிப்பா ளர் வசந்தராஜன் தலைமையில் காவல்துறையி னரை குவிக்கப்பட்டு பலவந்தமாக நேரடி விதைப்பு செய்ய முயன்றனர். இதைக் கண்ட பாலையூர் கிராம விவசாயத் தொழிலாளர்களும்- மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களும் திரண்டு சென்று, டிஆர்ஓ பேச்சுவார்த்தைக்குப் பரிந்துரை செய்வதாக ஆர்டிஓ சொன்ன நிலையில் ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டு தடுத்தனர்.

இந்நிலையில் துறை துணைகண்காணிப்பா ளர் காவல்துறையினரைக் கொண்டு விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கடுமையாகத் தடியடித் தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விதொச மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், விச மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், கட்சியின் ஒன்றியச் செயலாளர் விஜய காந்த் உள்ளிட்ட 32 பேரை கொடூரமாக காவல் துறையினர் தாக்கியுள்ளனர். கடுமையான ரத்தக் காயங்களுடன் அவர்களை கைது செய்து  மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறையின் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு விரோத மான இச்செயலை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உடன் விடுதலை செய்திட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் கோரிக்கையை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டு, நேரடி விதைப்பை கைவிட்டு உரிய சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.