states

தீக்கதிர் விரைவு செய்திகள்

12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க: சிபிஎம்

சென்னை, டிச.26- தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை,  வாழ்வியல் திறன் பாடங்களை கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000/- மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வோ, பணி நிரந்தரமோ இதுவரை ஏதும் செய்யப்படவில்லை. தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென தொடர்ந்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நிறை வேறாத நிலையே நீடிக்கிறது. இதனால் இவர்களின் குடும்பம் வறுமையில் வாடுகின்றன. எனவே, தமிழக அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் மிக குறைந்த ஊதியத்தில்  பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், பொங்கல்  போனஸ் உடன் வழங்கிடவும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

ஜன.9 சட்டமன்றம் கூடுகிறது

சென்னை,டிச.26- 2023 ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக  சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு திங்களன்று (டிச.26) செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 2023 ஆம்  ஆண்டு தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரை யுடன் ஜனவரி 9 ஆம் தேதி, காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்ட பத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினமே அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடை பெறும் என்பது முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

அவுரங்கசீப் - குரு கோவிந்தை மோதவிடும் பிரதமர் மோடி!

சீக்கிய மதக் குருக்களில் 10-ஆவது மற்றும் மிக முக்கியமானகுருவாக கருதப்படுபவர் கோபிந்த் சிங். இவரின் நினைவாக ‘வீர் பல் திவாஸ்’ தினம் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, முகலாய அரசர் அவுரங்கசீப்பையும், குரு கோவிந்தையும் மோத விட்டார். “அவுரங்கசீப்பும் அவரது மக்களும் வாள் மூலம் குரு கோபிந்த் சிங்கின் குழந்தைகளை மத மாற்றம் செய்ய முயற்சித்தனர். ஆகையால்தான் அவுரங்கசீப் குரு கோபிந்த் சிங்கின் 2 குழந்தைகளையும் கொலை செய்ய முடிவு செய்தார். அவுரங்க சீப்பின் பயங்கர வாதத்திற்கு எதிராகவும், இந்தியாவை மாற்ற வேண்டும் என்ற அவரின் திட்டத்திற்கு எதிராகவும் குரு  கோபிந்த் சிங் மலை போல் நின்ற அந்த காலத்தை நினைத்துப் பாருங்கள்” என்று பேசியுள்ளார்.

தேர்தல் வரவுள்ள நேரத்தில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்?

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2023 மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவ்வாறு தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. “தில்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளேன். அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை செய்யவுள்ளேன்” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜன.26-ல் ஹரியானாவில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து

விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிஷான் மோர்ச்சா’, ஹரியானா மாநி லத்தில் 2023 ஜனவரி 26-ஆம் தேதி மகா பஞ்சாயத்து நடத்த முடிவெடுத்துள்ளது. வட மாநிலங்களில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி விவசாயிகளின் மகா பஞ்சாயத்தை நடத்த முடி வெடுக்கப்பட்டு உள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை அனுசரிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்படவுள்ளது.  தேசிய கொடியை ஏற்றிய பிறகு, அரசு நிகழ்ச்சிகளுக்கு எந்தவித இடையூறு களையும் விளைவிக்காமல் டிராக்டர் பேரணிகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும் என்று சம்யுக்த கிஷான் மோர்ச்சா அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு ஜன.7-இல் துவங்குகிறது!

பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2023 ஜனவரி 7-ஆம் தேதி தொடங்க வுள்ளது. 500 கோடி ரூபாய் செலவில் 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 3 லட்சம் பேர் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர். 2023  மே மாதத்தில் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெ டுப்பு நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலை யில், பீகார் அரசு தானாகவே இந்த கணக்கெடுப்பில் இறங்கவுள்ளது.

கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு!

கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண் டாட்டத்திற்கு கர்நாடக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என  கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ராமரிடம் இருந்து சீதையையும் பிரித்தது பாஜக: கெலாட்

“பாஜக சாதி, இனம் மற்றும் மதங்களின் பெயர்களை வைத்து தேர்தல் ஆதாயம் தேடு வதை மக்கள் நன்கு புரிந்து வருகிறார்கள். பாஜக-வினர் இது போன்ற மோசடி விளை யாட்டுகள் மூலம் வெற்றி பெற்று வருகிறார்கள். மக்களிடம் பயத்தையும் கோபத்தையும் விதைத்து  ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட வைக்கிறார்கள். ‘ஜெய் சியாராம்’ என்று அவர்கள் ஏன் கூறு வதில்லை. அவர்கள் சீதா தேவியை கூட ராமரிடம் இருந்து பிரித்து விட்டார்கள். அதனால் தான் ஜெய்  சியாராம் கோஷமிடுமாறு நாங்கள் கூறுகிறோம். மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ராகுல் காந்தி அண்ணல் காந்தியின் நெறிகளை பின்பற்றி, அச்சத்தை அன்பின் மூலம் வெற்றி கொள்கிறார்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியுள்ளார்.

‘அடிப்படைவாத அரசியலால் நாட்டுக்குத்தான் இழப்பு’

“நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரையும் போல்  கிறிஸ்தவர்களும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். மத மாற்றம் தொடர்பாக நாடு முழுவதும் சலசலப்பு உருவாக்கப்படு கிறது. இது நியாயமற்றது; கவலை அளிக்கக்கூடியது. வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவது, தவ றான எண்ணத்தில் மதம் மாறுவது இரண்டுமே தவறு. இப்பிரச்சனையை சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து செய்யப்படும் அடிப்படைவாத அரசி யலால் நாட்டுக்குக் கிடைக்கும் பலனைவிட, இழப்புதான் அதிகம்’’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

ஜனார்த்தன ரெட்டிக்கு பாஜக அமைச்சர் ஆதரவு

கர்நாடக மாநில பாஜக முன்னாள் அமைச்சரும், சுரங்க மாபியா என்று விமர்சிக்கப்படு பவருமான ஜனார்த்தன ரெட்டி, பாஜக-விலிருந்து விலகி ‘கல்யாண ராஜ்ய பிரகதி’ என்ற பெய ரில் புதிய கட்சியை துவங்கியுள்ளார். கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் தேர்தலில் போட்டி யிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்ப ரும் பாஜக அமைச்சருமான ஸ்ரீராமுலு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஜனார்த்தன ரெட்டி யின் புதிய கட்சியால் பாஜக-வுக்கு பிரச்சனை இல்லை. அரசியல் வேறு, நட்பு வேறு. ஜனார்த்தன ரெட்டியுடனான நட்பு கால, காலத்திற்கும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியுடன் பாஜக நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா?

புதுதில்லி, டிச.26- “தில்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேயர் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என்றும், எந்த வேட்பாளரையும் நிறுத்தப் போவதில்லை என்றும் தில்லி பாஜக தெரிவித்தது. ஆனால் தற்போது  சுயேட்சை வேட்பாளரை தேர்தலில் நிறுத்த உள்ளது. பாஜக கவுன்சிலர்  கள் அந்த சுயேட்சை வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் ஆம் ஆத்மிக்கு சவால் விடப் போகிறார்களாம். பாஜக தேர்தலில் போட்டியிட வேண்டு மானால் ஆம் ஆத்மி கட்சியை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராட வேண்டும். சுயேட்சை வேட்பாளரின் தோளில் துப்பாக்கியை வைப்  பது இவ்வளவு பெரிய கட்சிக்கு பொருத்தமாக தெரியவில்லை” என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா  கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில்  கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, டிச.26- திருச்சி விமான நிலையத் திற்கு ஞாயிறன்று இரவு ஷர்ஜா விலிருந்து ஏர் இந்தியா விமா னம் வந்தது. இதில் வந்த பயணி களை வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது ஒரு பயணி உட லில் மறைத்து தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமி ருந்து 988.900 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்கத்தை அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றை உருக்கியபோது 846.500 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.46  லட்சத்து 37 ஆயிரத்து 127 என  மதிப்பிடப்பட்டது. மேலும் அவரி டம் அதிகாரிகள் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

பாரதியின் பேத்தி மறைவுக்கு  முதல்வர் இரங்கல்

சென்னை,டிச.26- பாரதியின் மகள் வழி பேத்தி லலிதா  பாரதி வயது முதிர்வு காரணமாக திங்களன்று (டிச.26) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.  இசையை முறையாகக் கற்றுக்கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆசிரியராக பணியாற்றி பல மாணவர்களை உருவாக்கியவர் லலிதா பாரதி. பெண்ணியம் சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பாரதியார் பாடல்களை இசை மற்றும் நூல் வடிவில் பரப்புவதிலும் முக்கிய பங்கு கொண்டிருந்தார். இவரது மகன்  ராஜ்குமார் பாரதி கர்நாடக இசைப்  பாடகர்.  லலிதா பாரதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறந்த கவிஞரும், இசையாசிரியரும், மகாகவி பாரதி யாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு வருத்த மடைந்தேன். தலைசிறந்த தமிழ் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லலிதா பாரதி மறைவால்வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வ லர்கள் உள்ளிட்டோருக்கு எனது  ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,டிச.26- குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  மேலும், வழக்கத்தைக் காட்டிலும் காற்றின் வேகம் அதிகமாக வீசும் என்ப தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.  டிசம்பர் 30 அன்று தமிழகம், புதுச் சேரியில் வறண்ட வானிலையே நிலவக் கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.

திருவனந்தபுரம் கடலில் காணாமல்போன இருவரை தேடும் பணி தொடர்கிறது

திருவனந்தபுரம், டிச.26- திருவனந்தபுரத்தில் கடலில் காணாமல் போன 3 பேரை தேடும் பணி திங்களன்று காலையில் மீண்டும்  தொடங்கியது. தேடப்பட்டு வந்தவர் களில் ஒருவரின் சடலம் ஞாயிறன்று (டிச.25)  கண்டெடுக்கப்பட்டது. புத்தன்தோப்பில் 2 பேரையும் அஞ்சுதெங்கு மாம்பள்ளியில் ஒருவரை யும் காணவில்லை. புத்தன்தோப்பில் இருந்து ஸ்ரேயாஸ் (16), சஜித் (19) ஆகியோரைக் காணவில்லை. மாம் பள்ளியைச் சேர்ந்த சஜன் ஆண்டனி  (34) என்பவர் அஞ்சுதெங்கில் இருந்து காணாமல் போயுள்ளார். தும்பா கடலில் குளிப்பதற்குச் சென்று  காணாமல் போன ஆறாட்டுவாஞ்சி யைச் சேர்ந்த பிராங்கோ என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. கடலோர காவல் படையினர் உதவி யுடன் தேடுதல் வேட்டை நடந்து வரு கிறது. ஞாயிறன்று இரவு தேடுதல் நடத்தப்பட்டது, ஆனால் பெரும் அலைகள் மற்றும் உள் நீரோட்டங் களால் தேடுதல் பணி தடைபட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வந்தவர்கள், கடற்கரை யில் குளித்தபோது விபத்தில் சிக்கி னர். கடந்த நாட்களை விட ஞாயிற்றுக் கிழமை கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. 3.2 மீட்டர் உயரம் வரை  கடல் அலை கேரள கடற்கரையில் டிசம்பர் 26 திங்களன்று இரவு 11.30 மணி வரை 2.5 முதல் 3.2 மீட்டர் உயரத்தில் அலை கள் எழ வாய்ப்புள்ளதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும். கடல் சீற்றம் வலுப்பெற வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் அறி வுறுத்தலின்படி, அபாய பகுதிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டும். துறைமுகத்தில் மீன்பிடி படகுகள், வள்ளங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும். படகுகளுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடை பிடிப்பதன் மூலம் மோதல் அபாயத்தை  தவிர்க்கலாம். மீன்பிடி உபகரணங் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடற்கரைக்கு செல்வது மற்றும் கடலில் உள்ள செயல்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.