states

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை

சென்னை, ஏப்.24- திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரி வித்துள்ளார்.  மாநில அரசின் சார்பில் திங்களன்று (ஏப்.24) காலையில் வெளியிடப்பட்ட அரசிதழில், தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள் ளது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் மாவட்ட ஆட்சி யரின் அனுமதியைப் பெற்று மது விலக்கு துணை ஆணையர்கள் சிறப்பு  அனுமதியை வழங்கலாம் என்றும் அறிவித்திருந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே சட்டத்  திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலை யில், அரசின் உள்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

திருமணக் கூடங்களில் முறையான  அனுமதி இல்லாமல் மதுபானம் பயன் படுத்தப்படுவதாக புகார்கள் வந்த  நிலையில், அரசு இதனை அறிவித்துள் ளதாகவும் பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என இதற்கான அனுமதி கட்டணங்கள் மாறுபடுகின்றன. இதற்கான விதிமுறைகளையும் அரசு வழங்கியுள்ளது.  அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் சார்பில் மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்த மது விலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, “திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானங்களுக்கு அனுமதி என்றும் ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனு மதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளை யாட்டுப் போட்டிகளில் மதுபானங்க ளுக்கு அனுமதி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். திருமண மண்டபங்களில் உரிமம் பெற்று மது அருந்தலாம் என உள்துறை  செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.