states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கேள்வி நேரத்திலிருந்து...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (மார்ச் 29) கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சரின் பதில்க ளும் வருமாறு:

சர்க்கரை ஆலைகள் புனரமைப்பு

வி.ஜி.ராஜேந்திரன் திமுக: திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திருவாலங்காடு ஊராட்சியில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தரம் உயர்த்த அரசு ஆவண  செய்யுமா? அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்: அந்த ஒரு சக்கரை ஆலை  மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு  சக்கர ஆலைகள் நலிவடைந் துள்ளன. உற்பத்தியும் குறைந்துள்ளது தொழிலாளர்கள் எண்ணிக்கை யும் குறைந்து விட்டது. இதை  அனைத்தையும் மறுசீரமைக்க வேண்டும் என்று முதலமைச்சரும் அறிவுரைத்திருக்கிறார். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகளிலும் கடலூர் மாவட்டத்தில் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் புனர மைப்பு பணிகள் நடந்து வருகின்றன.  சேலம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு  சர்க்கரை ஆலை மதுரை அலங்கா நல்லூர் சர்க்கரை ஆலைகளிலும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தோழர் ஜீவா பெயரில் விருது

டி.இராமச்சந்திரன் சிபிஐ: இலக்கியப் பேராசன் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்க அரசு முன் வருமா? அமைச்சர் தங்கம் தென்னரசு: விடுதலைப் போராளி, சமதர்ம பொது வுடமை கொள்கையின் மாபெரும் தலைவர் ஜீவாவின் பெகேரள முதல்வருடன் பேசுவோம்: துரைமுருகன்யரில் விருது வழங்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

எதிர்க்கட்சித் துணைத்தலைவர்  இருக்கை : அப்பாவுடன் அதிமுக கொறடா சந்திப்பு

சென்னை, மார்ச் 29- சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கனவே பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம்  மனு அளிக்கப்பட்டது.  அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்  செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதி மன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி  புதனன்று (மார்ச்  29) அப்பாவுவை சந்தித்தார். ஒ.பி.  எஸ் அணியினர் மேல் முறையீடு  செய்திருப்பதால் அதுவரை காத்திருக்குமாறு பேரவைத் தலைவர் அதிமுகவினரிடம் கூறியதாக தெரிகிறது.

கேரள முதல்வருடன் பேசுவோம்: துரைமுருகன்

சென்னை, மார்ச் 29- முல்லைபெரியாறு, பரம்பிக்குளம் ஆழி யாறு, நெய்யாறு இடதுகரை ஆகிய தண்ணீர்  பிரச்சனைகள் குறித்து நமது முதலமைச்சர் கேரள முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வு காண்பார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு பதில் அளிக்கை யில் இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று

காலை: நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. மாலை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

முன்விரோதத்தால் அதிமுக செயலாளர்   கொலை:  பேரவையில் முதல்வர் தகவல்

சென்னை, மார்ச் 29- சென்னை பெரம்பூர் அதிமுக பகுதிச் செயலாளர் முன்விரோதம் காரணமாகவே கொலை செய்யப் பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டா லின் விளக்கம் அளித்துள்ளார்.   சட்டப்பேரவையில் புதனன்று (மார்ச் 29) கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை குறித்த  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, போதை பொருள் விற்பனைக்கு எதிராக அதிமுக பெரம்பூர் தெற்குப் பகுதி செயலாளர் இளங்கோ பட்டப் பகலில் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் “கொல்லப்பட்ட அதிமுக  நிர்வாகி இளங்கோவன் சஞ்சய் என்பவருடன் ஏற்கனவே முன்விரோ தத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பழி  தீர்க்கும் விதமாக இந்தக் கொலை நடந்துள்ளது.சஞ்சய் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேபாளம் : கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்பு வெற்றி

காத்மண்டு, மார்ச் 29- நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக் கழக வளாகங்களில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல்களில் நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனி னிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் ஆகிய  கட்சிகளுடன் இணைந்துள்ள மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. அனைத்து நேபாள தேசிய சுதந்திர மாணவர்கள் அமைப்பானது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)யுடன் இணைந்ததாகும். மொத்தமுள்ள 44 வளாகங்களில் 19 வளா கங்களில் இந்த அமைப்பு வெற்றி பெற்றி ருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ள நேபாள மாணவர் அமைப்பு 18 வளாகங்களிலும், மாவோயிஸ்டு மையத் துடன் இணைந்து செயல்படும் மாணவர் அமைப்பு நான்கு வளாகங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சிறிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜனதா சமாஜ்வாதி கட்சியின் மாணவர் அமைப்பு இரண்டு வளாகங்களிலும், மற் றொரு கட்சியான ஜனாமத் கட்சியின் மாணவர் அமைப்பு ஒரு வளாகத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு வளாகங் களில் போட்டியின்றி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த  இரண்டு வளாகங்களில் மட்டுமே கட்சி  சார்ந்த மாணவர் அமைப்புகள் பொறுப்பு க்கு வரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெ ரும் கட்சியாக உருவெடுத்த நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனி னிஸ்ட்), மாணவர் பேரவைத் தேர்தலிலும் தனது மாணவர் அமைப்பின் மூலம் தனிப் பெரும் சக்தியாக வெளிப்பட்டுள்ளது. மேலும், மாணவர் அமைப்புகளும் அரசியல் பங்கேற்பு உள்ளவர்களாகவே இருப்பதையும் இந்தத் தேர்தல் காட்டுகிறது.