திருப்பூர், ஜன. 9 - அரசுப் போக்குவரத்துக் கழக திருப் பூர் மண்டல அலுவலகத்தில் தொழிலா ளர்களுக்கு மன நலப் பயிற்சி என்ற பெய ரில் ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த வர்கள் மூலம் மூளைச் சலவை வகுப்பு நடத்தப்படுகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக்கூடிய அரசுப் பேருந்து ஓட்டு நர், நடத்துநர்கள் பல்வேறு நெருக்கடி களையும், சிரமங்களையும் சந்திக்கின் றனர். அத்துடன் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளின் அணுகுமுறையும் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு மன ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்து கிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு மனநலப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இடையில் நிறுத்தப்பட்ட இந்த மனநல பயிற்சி வகுப்புகள் மீண்டும் கடந்த சில மாதங்க ளாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மண்டலத்திற்கு உட்பட்ட எட்டு கிளை அலுவலகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 20 பேர் தினமும் இங்கு பயிற்சிக்கு அனுப்பப் படுகின்றனர். கடந்த காலத்தில் ஆழி யாறு அறிவுத் திருக்கோயில் மூலம் இங்கு தொழிலாளர்களுக்கு யோகா பயிற்சி, தியானம் மற்றும் மனநல ஆலோ சனைகள் வழங்கப்பட்டு வந்தன. அது எந்த பிரச்சனையும் இல்லாமல் இயல்பாக நடந்து வந்தது.
ஆனால் தற்போது சர்ச்சைக்குரிய ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த வர்கள் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி பல குடும்பங்களை சீரழித்த, பலரது மர்ம மரணத்திற்குக் காரணமான ஈஷா யோகா மையம் வாசுதேவன் படத்திற்கு தீபம் ஏற்றியும், சத்குருவின் மொபைல் செயலியை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்தியும் வருவதாக இங்கு சென்று வந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உடல் கலை யோகா கற்றுக் கொள்வதில் தொழிலாளிகளுக்கு எவ்வித பிரச்சனை யும் இல்லை. ஆனால், இங்கு யோகா பயிற்சி, மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கு பதிலாக மூளைச் சலவை செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபடுவதாகவும் தொழிலாளர்கள் கூறி னர். குறிப்பாக அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள், பண பயன்களைத் தராமல் இருப்பதும், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இது குறித்து கோரிக்கை வைத்து பல்வேறு போராட்ட நடவ டிக்கைகளை மேற்கொண்டு வரு வதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் ஈஷா பயிற்சி வகுப்பில் தனிப்பட்ட தொழிலாளர் பிரச்சனை களை விட்டுவிட்டு, போக்குவரத்துக் கழ கத்தின் நெருக்கடிகள் என்று சொல்லி, தொழிலாளர்களிடம் அவர்கள் உரிமை களை பற்றி கேள்வி எழுப்ப வேண்டிய தில்லை என்ற மனநிலையை ஏற்படுத் தும் வகையில் பிரசங்கம் செய்யப்படு வதாகவும் தெரிவித்தனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட வர்கள் வேலை செய்து வரும் நிலை யில், போக்குவரத்துக் கழக நிர்வாகம், சர்ச்சைக்குரிய ஈஷா மையத்திற்கு ஆதரவாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அரசின் கவனத்துக்குச் சென்று அர சின் அனுமதியுடன் தான் இவர்களை பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்களா அல் லது போக்குவரத்துக் கழக அதிகாரி களின் தன்னிச்சையான நடவ டிக்கையா என்றும் தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற் கும் தொழிலாளிகளை புண்படுத்தும் வகையில் பயிற்சியாளர்களும், அதிகாரிகளும் நடந்து கொள்ளும் விதம் மதச்சார்பின்மைக்கு எதிரான தாகும். எனவே அரசு உரிய கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும், மண்டல அலுவலகத்தில் ஈஷா பயிற்சி வகுப்பைத் தடை செய்ய வேண்டும் என தொழிலாளர்களும், தொழிற்சங் கத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.