திருவனந்தபுரம், நவ.8- கேரளாவில் செய்தியாளர் சந்திப்பில் இருந்து ஊடகப் பிரதிநிதிகளை வெளியேற்றிய ஆளுநர் ஆரிப் முகம்மது கானின் செயல் ஜனநாயக விழுமியங்களை அவமதிக்கும் செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு தெரி வித்துள்ளது. கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் திங்களன்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவர் பேசுவதற்கு முன்பு கைரளி, மீடியா ஒண் செய்தி ஊடகங்களை குறிப்பிட்டு வெளியேறு மாறு கூறினார். இதுகுறித்து சிபிஎம் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னதாக அனுமதி பெற்று செய்தியாளர் சந்திப்புக்கு வந்த ஊடக ஊழியர்களை ஆளுநர் வெளியேற்றியது அத்துமீறலாகும். இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான நேரடியான தாக்கு தலாகும். அவசரநிலை காலம் உட்பட இதுவரை கண்டி ராத நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கை உறுதிமொழி மீறல் மற்றும் அரசியல் சாசனத்தை மீறுவதாகும். அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1) (A) மூலம் உத்தர வாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தைப் பாது காக்கும் பொறுப்பில் உள்ள ஆளுநரே அதை காலில் போட்டு மிதித்துள்ளார். மாநில குடிமக்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லாத அரசமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில், ஆளுநரே அதை மீறத் தயாராகி இருக்கிறார். ஜனநாயகம், வெளிப்படையான விவாதம் போன்ற வற்றில் ஆர்வம் காட்டாத ஆளுநர், தான் சொல்வதைக் கேட்டாலே போதும் என்ற அடாவடித்தனத்தைக் காட்டி யுள்ளார். ஆட்சியாளரின் மடியில் அமர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக மட்டுமே பேசும் கோடீஸ்வர ஊட கமாக கேரள ஊடகங்களை மாற்றுவதுதான் ஆளுந ரின் முயற்சி. அதற்கு அடிபணியாவிட்டால் விரட்டியடிக் கப்படுவார்கள் என்கிற செய்தியை அவர்விடுத்துள்ளார்.
கேரளாவையும் மலையாள மக்களையும் அவ மதித்து, கூட்டாட்சி விழுமியங்களை கொஞ்சம் கூட ஏற்காத ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்ந்து வெளி வருகின்றன. மலையாள ஊடகங்களிடம் பேச மாட்டேன் என்று முதலில் கூறிய ஆளுநர் தொடர்ந்து மலை யாள மொழியையும் கலாச்சாரத்தையும் அவமதித்து வருகிறார். பின்னர், கட்சித் தொண்டர்களான பத்திரிக் கையாளர்களிடம் பேச மாட்டேன் என்று கூறிய ஆளு நர், ஆர்.எஸ்.எஸ்.காரராகவே செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு முற்போக்கு ஜன நாயக கேரளம் எதிர்ப்பு தெரிவித்தது. ஊடக சுதந்தி ரத்தின் மீதான அத்துமீறலுக்கு எதிராக ஊடகங்களிட மிருந்தே கடும் எதிர்ப்புகளை எதிர்பார்க்கிறோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.