பாபு ஜெகஜீவன்ராம் பெயரிலான திட்டத்தை மாற்றிய மோடி அரசு: ஜேடியு கண்டனம்!
பாட்னா, மார்ச் 27 - பீகார் மாநிலத்தில் பாபு ஜெகஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின் பெயரை ஒன்றிய பாஜக அரசு மாற்றி யமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி யினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டியல் வகுப்பு மாணவர் களுக்கு விடுதி கட்டுவதற்காக இத்திட் டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலை யில் ஒன்றிய அரசு இத்திட்டத்தின் பெய ரை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், 2022-23இல் மாற்றப்பட்ட திட்டத்தின் கீழ் பீகாருக்கு எந்த மானியமும் வழங்கவில்லை என்றும் ஐக்கிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது. பீகாரைச் சேர்ந்த தலித் தலை வரும், முன்னாள் துணைப் பிரதமரு மான பாபு ஜெகஜீவன் ராம் பெயரிடப்பட்ட திட்டத்தை மாற்றி, ஒன்றிய அரசு அதை வேறு இரண்டு திட்டங்களுடன் இணைத்து, பிரதான் மந்திரி அனுசுசித் ஜாட்தி அபியுதாய் யோஜனா (PM-AJAY) என்று பெயர் மாற்றியுள்ளது என்று ஜக்கிய ஜனதா தளம் தலைவர்கள் கூறியுள்ளனர். “ஒன்றிய அரசின் திட்டத்தில் ஒரு மாநிலத்தின் கணிசமான பங்களிப்பு இருந்தாலும், ஒன்றிய அரசு பல திட்டங்களின் பெயர்களை தங்களது விருப்பப்படி மாற்றி, பெரும்பாலான திட்டங்களுடன் பிரதமர் என்ற வார்த்தையை முன்வைத்து வரு கிறது. பாபு ஜெகஜீவன் ராம் நாட்டின் சிறந்த தலித் தலைவர் மட்டுமல்ல, துணைப் பிரதமராகவும் இருந்துள் ளார். மோடி அரசாங்கம் ஜெக ஜீவன் ராம் பெயரை மாற்றம் செய்த தோடு மட்டுமல்லாமல், பெயர் மாற்றப்பட்ட திட்டமான PM-AJAY திட்டத்தின் கீழ் பீகாருக்கான மானி யத்தையும் நிறுத்தியுள்ளது என்று ஐக்கிய ஜனதாதளம் செய்தித் தொடர் பாளரும், சட்ட மேலவை உறுப்பின ருமான நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். 2022-23 நிதியாண்டில் இத்திட்டத் தின் கீழ் 5,513 திட்டங்களை ஒன்றிய அரசு முன்மொழிந்தது. ஆனால் எந்தத் திட்டமும் பீகாருக்கு கொண்டுவரப் படவில்லை. மானியமும் வழங்கப்பட வில்லை. பட்டியல் வகுப்பு மாண வர்களுக்கு என முன்மொழியப்பட்ட 42 விடுதிகளிலும் ஒன்றுகூட பீகாருக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
காஞ்சிபுரம், மார்ச் 27- காஞ்சிபுரம் வட்டம், குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 22 ஆம் தேதி திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப் பொருட்கள் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி, பள்ளூரை சேர்ந்த முருகன் 9 பேர் சம்பவம் நடந்த அன்று பலியானார்கள். உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் செங்கல் பட்டு அரசு செங்கற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீஷ் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந் தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குண்ண வாக்கத்தை சேர்ந்த ரவி (49) என்பவர் திங்களன்று (மார்ச் 27) பரிதாபமாக இறந்தார். இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியான வர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது. இன்னமும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை யில் 4 பேரும், சென்னை கீழ்ப்பாக்கத் தில் 2 பேரும், காஞ்சிபுரத்தில் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
100 நாள் வேலையில் 2 வாரங்கள் கூட வேலை வழங்க முடியாது: இரா. முத்தரசன்
சென்னை, மார்ச் 27- ஒன்றிய பாஜக அரசு விவசாயத் தொழிலாளர்களை வஞ்சித்துவிட்டு என்று இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அறிவித்துள்ளது. மார்ச் 25 அன்று வெளியான அரசிதழ் அறிவிப்புப்படி தமிழ்நாட்டில் வேலை உறுதி யளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.294 ஊதியம் வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை அட்டை பெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ.600 வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர்களும், தொழிற்சங்க அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசின் ஊதிய அறிவிப்பு பெருந்த ஏமாற்றமளிக்கிறது. பாஜக ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்கி, அழித் தொழிக்கும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்க ளுக்கு தலா 100 நாள் வேலை வழங்க ஆண்டுக்கு ரூ. 2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்து வந்த பாஜக ஒன்றிய அரசு வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது. இந்த நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான அளவில் உயர்த்தாமல், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசை கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 என நிர்ணயித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏமனை சீர்குலைக்காதே!
லட்சக்கணக்கானோர் பேரணி சனா, மார்ச் 27- கடந்த எட்டு ஆண்டுகளாக ஏமன் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா, அதன் கூட்டாளிகள் மற்றும் தாக்குதல்களுக்கு ஆயுதங்களை வழங்கி வரும் அமெரிக்கா ஆகிய நாடு களைக் கண்டித்து ஏமனில் நாடு தழு விய போராட்டங்கள் நடந்துள்ளன. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொடூரமான தாக்குதல்களை சவூதி அரேபியா தொடங்கியது. இந்தத் தாக்கு தல்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும், தளவாடங்களையும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் விநியோகித்து வருகின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் அன்சருல்லா இயக்கத்தை அதி காரத்தில் இருந்து அகற்றி விட்டு, தங்களுக்குச் சாதகமான அரசை அமைப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கமாகும். தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளாவிட்டாலும், தொடர் தாக்கு தல்கள் மூலமாகக் கடந்த எட்டு ஆண்டு களாக ஏமனை சீர்குலைத்து வருகிறார்கள். எல்லைப்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களைக் கைப்பற்றி, அதைக் கொள்ளையடிக்கிறார்கள். இதுவரை யில் ஆயிரக்கணக்கானோர் தாக்குதல் களுக்குப் பலியாகியுள்ளனர். இந்நிலை யில், சவூதி அரேபியாவின் எட்டு ஆண்டு காலத் தாக்குதல்களைக் கண்டித்து ஏமன் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியிருக்கின்றனர். எட்டு ஆண்டுகாலமாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் தாக்குப் பிடித்ததற்கு, மக்கள் ஆதரவு முக்கியமான காரணம் என்பதைப் பேரணிகளில் பங்கேற்ற எண்ணிக்கை காட்டுகிறது. தலைநகர் சனா மற்றும் சாடா மற்றும் டைஸ் ஆகிய மாகாணங்களில் பெருந்திரளாக மக்கள் திரண்டனர். போருக்கு எதிரான தங்கள் எழுச்சி ஏமனுக்கு சாதகமான தீர்வு காணப்படும் வரையில் தொடரும் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.
குஜராத் அரசு விழாவில் எம்.பி., எம்எல்ஏக்களுடன் பில்கிஸ் பானு வல்லுறவுக் குற்றவாளி!
புதுதில்லி, மார்ச் 27 - பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வல்லுறவுக் குற்றவாளியான சைலேஷ் சிம்மன்லால் பாட், குஜராத் அரசு விழாவில், அம்மாநில எம்பி, எம்எல்ஏ-க்களுடன் ஒருசேர மேடையில் கலந்து கொண்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர் களுக்கு எதிராக வன்முறை தூண்டி விடப்பட்டது. அப்போது அகமதாபாத் அருகிலுள்ள தாகோடு மாவட்டம் ரன்தீக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலை யில், அவரையும், அவரது தாயார் உள்ளிட்ட மேலும் 4 பெண்களையும் 2002 மார்ச் 3 அன்று கும்பல் ஒன்று வல்லுற வுக்கு உள்ளாக்கியது. மேலும், பானுவின் 3 வயது பெண்குழந்தை சலேஹாவை பாறையில் அடித்துக் கொன்ற அந்தக் கும்பல், மொத்தமாக 7 பேரை கொன்று குவித்தது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, பில்கிஸ் பானு நடத்திய நீண்ட நெடிய சட்டப்போராட்டம் காரணமாக, 2008-ஆம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்ற வாளிகள் கோத்ரா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே குற்றவாளிகள் 11 பேரையும், 2022 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு குஜராத் பாஜக அரசு சிறையில் இருந்து விடு தலை செய்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. இவர்களை விடுவிப்பதற்கான அரசு குழுவில் இடம்பெற்றவரும், கோத்ரா தொகுதி பாஜக எம்எல்ஏ-வுமான சி.கே. ரவுல்ஜி, “11 பேரும் ஏதாவது குற்றம் செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் குற்றம் செய்யும் எண்ணம் அவர்களிடத்தில் இல்லை. மேலும் அவர்கள் பிராமணர்கள். பிராமணர்கள் நல்ல சன்ஸ்காரம் (நல்ல நெறிமுறைகள் கொண்டவர்கள் மற்றும் ஒழுக்கமானவர்கள்) கொண்டவர்கள் என்று அறியப்படுகிறார்கள். அப்படிப் பட்டவர்களை எதோ மூலையில் வைத்து தண்டிப்பது யாரோ ஒருவரின் தவறான நோக்கமாக இருக்கலாம். எனினும், சிறையில் அவர்களின் நடத்தை நன்றாக இருந்தது” என்று தெரிவித்தார். தற்போது 11 பேரின் விடுதலைக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில்தான், பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வல்லுறவுக் குற்ற வாளியான சைலேஷ் சிம்மன்லால் பாட், குஜராத் அரசு விழா ஒன்றில், அம்மாநில எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஒன்றாக மேடையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகச் செய்திகள்
சில நாட்களுக்கு முன்பாக உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட பின்லாந்து பிரதமர் சன்னா மரின், போர் விமானங்களை நன்கொடையாக அளிப்போம் என்று கூறிவிட்டார். ஆனால், பின்லாந்தின் ஜனாதிபதியோ அல்லது வெளியுறவுத்துறை, பாது காப்புத்துறை அமைச்சர்களோ இது பற்றி எந்தத் தகவல்களும் இல்லை என்று கூறினர். நிர்வாகத்தில் பெரும் குழப்பத்தை இது ஏற்படுத்தி யது. 2030 ஆம் ஆண்டில் காலாவதியாகப் போகும் போர் விமானங் களை உக்ரைன் தலையில் கட்டிவிடலாம் என்று மரின் நிர்வாகம் கருதியதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதி களைக் கொலை செய்தோம் என்று சோமாலியாவின் ராணுவம் அறிவித்திருக்கிறது. இன்னும் சில தளங்களை அவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு எதிராகத் தீவிரமான ராணுவ நடவடிக்கைகள் இருக்கும் என்றும் சோமாலியாவின் ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது தெரிவித்துள் ளார். இதுவரையில் சுமார் 70 சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை விடுவித்துள்ளதாக அந்நாட்டின் செய்தித்துறை கூறி யுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் 4 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட பகுதி காட்டுத்தீயால் எரிந்துள்ளது. தற்போதுள்ள நீர் மற்றும் வானிலை ஆகியவை எங்கள் நாட்டில் எப்போதும் இருக்கக்கூடிய தன்மையில் இல்லை என்று அந்நாட்டின் வானிலைத்துறை அமைச்சர் ரிவேரா தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சுற்றி யுள்ள எட்டு சிறிய நகரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறியிருக் கிறார்.
50,000 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாநில அரசின் புதிய சுகாதார மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்களனன்று அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 50,000 மருத்துவர்கள் 3 கிமீ நீளத்தில் பேரணி நடத்தினர். துணை மருத்துவ பணியாளர்கள் 5 முதல் 6 கிலோமீட்டர் வரை அணிவகுத்துச் சென்றதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) டுவிட்டர் பக்கத்தில் வீடி யோவை வெளி யிட்டுள்ளது.
நாகப்பட்டினம் கட லோரப் பகுதியில் கச்சா எண்ணெய் கசிந்த விபத் தில், மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முடிவு எதுவும் இல்லை என நாடாளுமன்றத்தில் வைகோ எழுப்பிய கேள் விக்கு ஒன்றிய பெட்ரோ லியத்துறை இணைய மைச்சர் பதிலளித்துள்ளார்.