states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் இத்தாலி பிரதமர்

இந்தியா, இத்தாலி இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 75-வது ஆண்டை இரு நாடுகளும்  இந்த ஆண்டு கொண்டாடுகின்றன. அந்த வகையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இரண்டு  நாள் பயணமாக மார்ச் 2-ஆம் தேதி இந்தியா வருகிறார். அவருடன் துணை பிரதமரும், வெளியுற வுத்துறை அமைச்சருமான ஆன்டணியோ தாஜன், மற்றும் உயர்மட்ட வர்த்தக குழுவும் இந்தியா வரு கிறது. மார்ச் 2 பிற்பகலில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும், அதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், இத்தாலி பிரதமர் சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்துப் பேசுகிறார்.

மேகாலயா, மணிப்பூரில் நிலநடுக்கம்: 3.7 ரிக்டர் வரை பதிவு!

மேகாலயா மாநிலத்தில் செவ்வாயன்று காலை 6.57 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேகாலயாவில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு  29 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மணிப்பூர் அருகே உள்ள  நோனி பகுதியிலும் செவ்வாயன்று அதிகாலை 2.46 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவியேற்றார் குஷ்பு!

புதுதில்லி, பிப்.28- பாஜக-வின் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த நடிகை குஷ்பு, ஒன்றிய பாஜக அரசால் தேசிய மக ளிர் ஆணைய உறுப்பி னர் பதவிக்கு நியமிக்கப் பட்டார்.  இந்நிலையில், தில்லி யில் உள்ள அலுவலகத்தில் செவ்வாயன்று மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  இதையொட்டி, “எனது தலைவர் நரேந்திர மோடி மற்றும் ஷர்மரேகா அவர் களின் ஆசியுடன் இந்த பெரிய பொறுப்பை ஏற் றுக்கொள்கிறேன். எங்கள் தேவிகளின் நலன்கள் எல்லாத் துறைகளிலும் பாது காக்கப்பட உங்கள் அனை வரின் பிரார்த்தனைகளை யும் ஆதரவையும் நான் விரும்புகிறேன்” என டுவிட்ட ரில் பதிவிட்டுள்ளார்.

ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மீண்டும் காவல்

திருவண்ணாமலை,பிப்.28- திருவண்ணாமலை மாவட்டத்தில்   நான்கு ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடகா கோலார் பகுதியிலிருந்து விமானம் மூலம் அரியானாவுக்கு சென்ற  முக்கிய குற்றவாளிகளான முகமது  ஆரிஃப் (35), மற்றும் ஆசாத் (37),  ஆகிய இருவரையும் திருவண்ணா மலை தனிப்படை காவலர்கள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர்,  திருவண்ணாமலை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் முன்பு ஆஜர்படுத்தி 14 நாள்  காவலில் அடைத்தனர். இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்ட கொள்ளையர்கள் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி கவியரசன், கொள்ளையர்கள் இருவரையும் 7 நாள்  காவலில் விசாரிக்க பிப்.22 அன்று அனுமதி வழங்கினார். இதையடுத்து நகர காவல் துறை யினர் 7 நாள் விசாரணை மேற்கொண் டனர். அதனைத் தொடர்ந்து, நீதிபதி கவியரசன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அப்போது, வரும்  14 ஆம் தேதி வரை மீண்டும் நீதிமன்ற  காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதனையடுத்து ஏடிஎம் கொள்ளையர்கள் இருவரையும் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

3 மாணவர்கள் பலி:  நிவாரணம் அறிவிப்பு

சென்னை,பிப்.28- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே செவ்வாயன்று காலை கார்மோதி பள்ளி மாணவர்கள்  3 பேர் பலியானார்கள்.  வளையாம்பட்டு மேம்பாலம் அருகே சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்த  கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,  அணுகு சாலையில் (சர்வீஸ் ரோடு) சென்று கொண்டிருந்த பள்ளி மாண வர்கள் 3 பேர் மீது மோதியது. இதில்  படுகாயமடைந்த மாணவர்கள் சூர்யா,  விஜய், சபீக் ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த பள்ளி மாணவர் களின் குடும்பத்திற்கு தலா ரூ.2  லட்சம் நிவாரணம் வழங்க உத்தர விட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி கொலை வழக்கு: கவுஸ் ஆதம்பாஷா ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை,பிப்.28- திமுக முன்னாள் எம்.பி மருத்து வர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. மருத்து வர் மஸ்தான் கடந்தாண்டு டிசம்பர் 22 ஆம் தேதி கூடுவாஞ்சேரி அருகே  மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இந்த நிலையில், மஸ்தான் மரணத் தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது  மகன்  அளித்த புகாரை விசாரித்த  காவல்துறையினர் கார் ஓட்டுநர் உள்பட  5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது தம்பியான கவுஸ் ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கவுஸ் ஆதம் பாஷா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு செவ்வாயன்று(பிப்.28) விசா ரணைக்கு வந்தது. அப்போது மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், “ மஸ்தான் கழுத்தை  நெரித்து கொலை செய்யப்பட்டுள்ள தாக தடய அறிவியல் துறை அறிக்கை  தெரிவித்துள்ளது. குடும்ப பிரச்ச னைக்காக அவரை கொலை செய்துள் ளனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிட்டார். அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வினோத், மஸ்தான் மரணம் தொடர்பாக தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக் கல் செய்தார். மேலும் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.

மணிஷ் சிசோடியா கைதுக்கு திமுக கண்டனம்

சென்னை,பிப்.28- தில்லி துணை முதல்வர் மணிஷ்  சிசோடியா கைதுக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கண்டனம்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான தில்லி  அரசின் புதிய மதுபானக் கொள்கை  தொடர்பான வழக்கில், அம்மாநிலத் தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடி யாவை சிபிஐ கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. விசாரணைக்கு ஆஜராகும் போதே தன்னைக் கைது  செய்து விடுவார்கள் என மணிஷ் சிசோடியா சொன்னதைப் போலவே,  ஒன்றிய அரசின் சிபிஐ அவரைத் தற்போது கைது செய்து, 5 நாள் விசாரணை செய்கிறது. எதிர்க்கட்சிகள் மீது, ஒன்றிய  அரசின் விசாரணை அமைப்பு களை ஏவி விடும் போக்கு பாஜக விற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசின் கீழ்  உள்ள அனைத்து அமைப்பு களையும் தனது கூட்டணிக் கட்சிகள்  போல் ஆட்டுவித்து, எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடும் போக்கு கவலைக்குரியது. இது ஜனநாயக விரோதம் மட்டு மல்ல, அப்பட்டமான சட்டவிரோ தம். புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரம் இந்த ஆட்சியில் காற்றில் பறந்துள்ளது போல் வேறு எந்த ஆட்சியிலும் நடைபெற்றதில்லை என்பதையே எதிர்க்கட்சித் தலை வர்கள் ஒவ்வொருவராகக் குறி வைத்து கைது செய்யப்படுவதில் நிரூபிக்கப்பட்டு வருகிறது என்றும் பாலு சாடியுள்ளார்.

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பண்டிட்டிற்கு  இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமியர்கள்! 

ஸ்ரீநகர், பிப். 28 - ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அச்சன் பகுதியில் வசித்து வந்த பண்டிட் சமூகத்தைச்சேர்ந்த சஞ்சய் சர்மா (40) என்பவர் தீவிரவாதிகளால் இரண்டு நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார்.  அச்சன் பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சஞ்சய் சர்மா சென்று கொண்டிருந்தபோது, பயங்கர வாதிகள் மிக அருகில் இருந்தபடி அவரை துப்பாக்கி யால் சுட்டுவிட்டுத் தப்பினர். நெஞ்சில் குண்டு  பாய்ந்து கீழே விழுந்த சஞ்சய் சர்மா மருத்துவமனை க்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே சஞ்சய் சர்மா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காஷ்மீர் பண்டிட்டான சஞ்சய் சர்மா, ஒரு வங்கியின் ஏடிஎம் காவலாளியாக பணியாற்றி வந்தார். அண்மைக் காலமாக, பண்டிட் சமூகத்தி னர் குறிவைத்து தாக்கப்பட்டு வந்ததால், சிறிது காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில்தான் மார்க்கெட் செல்லும் வழியில் அவர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட் டார். இந்த சம்பவம் காஷ்மீரில் மீண்டும் பதற்றத் தை ஏற்படுத்தியது. அச்சன் கிராமத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டனர்.  சஞ்சய் சர்மா-வின் படுகொலைக்கு முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகி யோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். “காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி விட்டதாக சித்தரித்துக் கொண்டு, மறுபுறத்தில் பண்டிட் சமூகத்தினரை பாதுகாக்க தவறிவிட்டதாக ஒன்றிய அரசை மெகபூபா முப்தி சாடினார். இதனிடையே, அச்சன் பகுதியில் வசித்துவந்த ஒரே ஒரு காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாதான் என்ற நிலையில், அவரது மரணத்தால் இஸ்லாமியர்கள் பெரும் துயரம் அடைந்தனர். அத்துடன் சர்மாவின் இறுதி நிகழ்ச்சியில் பெருந்திரளாக கூடிய அவர்கள், தாங்களாகவே முன்வந்து சர்மா-வின் இறுதி நிகழ் ச்சிகளை முன்னின்று நடத்தினர். இது சஞ்சய் சர்மா வின் உறவினர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.