சென்னை,அக்.16- குலசேகரப்பட்டினத்தில் விரைவில் இரண்டாவது ஏவு தளம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். சென்னை தலைமைச் செய லத்தில் திங்களன்று (அக்.16) இஸ்ரோ தலைவர் சோம்நாத், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து சந்திரயான் மூன்று மாதிரி உருவ சிலையை பரிசாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத், “இன்னும் இரண்டு ஆண்டுகளில் குல சேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவு தளம் பணிகள் முடிவடை யும், அதற்காக 2000 ஏக்கர் நிலம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தோம்” என்றார். தமிழ்நாடு தற்போது பல்வேறு தொழில் வளர்ச்சியி லும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் அமைத்துள் ளால் முதல்வருக்கு நன்றி தெரி வித்தோம் என்றும் அவர் கூறினார். சென்னை, மதுரை, திருச்சி கோவை உள்ளிட்ட தமிழ் நாட்டை சுற்றியும் தொழில் வழித்தடங்களை தமிழ்நாடு அரசு அமைத்து வருவதால் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டா 50 ஆண்டு கள் பழமையானது என்றும் ஏவுகணைகள் ஸ்ரீலங்கா வழியாக செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது குல சேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைத்தால் எளிதாக சிறிய ராக்கெட்டுகள் செல்வ தற்கு உதவியாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்டம் மகேந்திர கிரி ஏவுதளத்திற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என்றும் என்றும் அவர் தெரி வித்தார்.
தயார் நிலையில் ககன்யான்
ககன்யான் முதல் கட்ட சோதனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் பணி தொடர்பான பாதுகாப்பு சோதனை நடைபெற்று வருகி றது. இன்னும் எலக்ட்ரிக் உள்ளிட்ட ஒரு சில சோதனைகள் நடைபெற்றுள்ளது. தற்போதைய நிலப்படி, வருகின்ற 21ஆம் தேதி வானிலை சீராக இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது. வானிலை மற்றும் கடல் சீராக இருக்கும் பட்சத்தில் வரும் 21ஆம் தேதி ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என கூறினார்.
பிரக்ஞானந்தாவுடன் சந்திப்பு
முன்னதாக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறும்போது, செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை சந்தித்ததில் மகிழ்ச்சி, பிரக்ஞானந்தா எங்களுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்த இருப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் நிலவில் சாதித்ததை இவர் பூமி யில் சாதித்து உள்ளது பெருமை யாக உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.