சென்னை, மார்ச் 27- கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகுசர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனை கள் பொது மக்களிடையே அதி கரித்துள்ளதாக அப்போலோ மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். சுவாச மண்டலம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் சார்பில் நெஞ்சக சிகிச்சைக்கான உச்சி மாநாடு-2023 சென்னையில் நடை பெற்றது. இம் மருத்துவமனையின் மூத்த சுவாச மண்டல நிபுணர் ஆர்.நர சிம்மன் தலைமை வகித்தார். நெஞ்சக சிகிச்சைத்துறை மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், வயது வந்தோருக்கான தடுப்பூசி, ஆஸ்துமா, இன்ப்ளூயன்சா பாதிப்பு, சுவாச நோய்கள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர். குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்புக்கு பிந்தைய நிலையில் பெரும் பாலானவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்து உள்ளதாகவும், தற்போது பரவும் இன்ப்ளுயன்சா ஏ மற்றும் பி வகைகளின் காரணமாக தொற்று பாதிப்பு எளிதில் ஏற்படுவதாக வும் கூறி விவாதித்தனர். இதனால் சிகிச்சை அளிப்பதற்கு சவாலாக இருப் பதாகவும் தெரிவித்தனர். இந்த நிகழ்வை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், “கொரோனாவின் தாக்கம் நமக்கு பலவற்றை கற்றுக்கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் மருத்துவத் துறை யின் பயன்பாட்டை தெளிவுபடுத்தி யுள்ளது. இந்திய மருத்துவத் துறை யில்சமீப காலமாக அதிகரித்து வரும் முன்னேற்றங்கள் பாராட்டத் தக்கவை” என்றார். தொடர்ந்து சுவாச மண்டல நிபுணர் ஆர்.நரசிம்மன், தொற்றுநோய் பிரிவு மருத்துவர் சுரேஷ்குமார் ஆகியோர் கூறுகையில், “கொரோனா தொற்று பாதிப்புக்குபிறகு சிலருக்கு உடல் சோர்வு, ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, நுரையீரல் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகள் சீராக ஏற்படுவதை காணமுடிகிறது. சர்க்கரை நோய் பிரச்சனையும் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது என்றனர்.