states

கோவில்களின் நிர்வாகம் அரசிடமிருந்து மாறினால்...

திருச்செந்தூர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி தங்கம் பத்தி ரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் கோவிலுக்கு ஆண்டு க்கு ரூ.2.50 கோடி வட்டி கிடைக்கும். இந்த ரூ.100 கோடி பெறுமானமுள்ள தங்கம் அனைத்தும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியதாகும். தங்கத்தின் மொத்த எடை 211.546 கிலோ. இது பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப் பட்டது. இந்த நிகழ்வு 2024 ஜூன் 23 அன்று (வெள்ளிக்கிழமை)  திருச்செந் தூரில் நடைபெற்றது. பக்தர்கள் அளிக்கும் தங்க ஆபரணங்கள் அனைத்தும் பூஜைகளின் போது சிலைகளை அலங்கரிக்கப் பயன்படுத்த முடியாது என்பதால், அதை மும்பையில் உள்ள மத்திய அரசின் மையத்தில் சுத்தம் செய்து உருக்கி, வங்கியில் டெபாசிட் செய்ய சுத்தமான தங்க கட்டிகளாக மாற்றப்படும்.  இந்த முதலீட்டின் மூலம் கோவிலுக்கு கணிசமான வட்டி வருமானம் கிடைக்கும். வட்டிப் பணம் கோயில்களைப் புதுப்பிக்கப் பயன்படுத்தப்படும். ஏற்கனவே இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பவானி அம்மன் கோயில், பெரியபாளையம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் காணிக்கையா கச் செலுத்திய தங்க ஆபரணங்கள் உருக்கப்பட்டு அவை தூய தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இவையும் பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.  பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் நல்லது. இதை சங்கிக் கூட்டங்களும், ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கம் கபளீகரம் செய்யத் திட்டமிட்டு இந்துக் கோவில்களை இந்துக்களிடம் ஒப்படை யுங்கள் எனக் கூப்பாடு போட்டு வருகின்றன.

கோவில்களில் கொள்ளையடிக்கத் திட்டம்

 சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வள்ளுவர் கோட்டத் தில் நடந்த போராட்டத்தில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறையை அகற்றுவதற்கான கோப்பில் முதல் கையெழுத்தி டுவோம் எனப் பேசியுள்ளார்.  இந்து அறநிலையத்துறையின் செயல்பாட்டில் பிரச்சனை இருந்தால் தாராளமாக தெரியப்படுத்தலாம்.  ஒழுங்குபடுத்தலாம். ஊழல் நடந்தால் சம்பந் தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போராடலாம். அதைவிடுத்து பாஜக, இந்து முன்னணி போன்ற இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், கோவில்களை பக்தர்களிடம் விட்டுவிடுங்கள் என்று தொடர்ச்சியாக ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

பாஜக, ஆர்எஸ்எஸ்சிடம் ஒப்படைக்கலாமா...?

அறநிலையத்துறை மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோவி ல்களை இந்துக்களிடம் ஒப்படைக்க கோருகிறார் பாஜக தலைவர் அண்ணா மலை யாரிடம்? அவர்களது கட்சியின் நிர்வாகிகளிடமா?, ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடமா? இவர்களிடம் ஒப்படைத்தால் கோவில் சொத்துக்களும், நகைகளும், வரலாற்று புகழ் பெற்ற சிலைகளும் பாதுகாப்பாக இருக்கும் என்பதற்கு  உத்தரவாதம் உண்டா?. கோவில் நிர்வாகங்களின் பெயரில் உள்ள சில ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகை பாதுகாக்கப்படுமா?. இவர்கள் கோவில்களை தங்களிடம் ஒப்படையுங்கள் என கூக்குரலிடு வது  பக்தியினால் அல்ல, கோவில்களை குறுகிய அரசியல் ஆதாயத்திற் காக பயன்படுத்தவும், வரைமுறையின்றி கொள்ளையடிக்கவும் தான். கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் பல்லாயிரக்கணக்கான விவசாயிக ளையும், கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் பல லட்சம் ஏழை, எளிய மக்களையும் அடித்து விரட்டி விட்டு இவைகளை அபகரிக்கும் நோக்குட னேயே இக்கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் சீரழித்து மக்களின் வழிபாட்டு உரிமை யையும் பறிக்க வேண்டும் என்பதே அவர்களது உண்மை நோக்கம். சனாதனத்தையும் சாதிப் பாகுபாட்டையும் நிலைநிறுத்த தெய்வங்களின் பெயரைப் பயன்படுத்துவது தான் அவர்களது வழக்கம். இதை பக்தர்கள் அனுமதிக்கக் கூடாது.

நமது சிறப்பு நிருபர்