மதுரை, ஜூன் 27- சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் இன்னும் எத்தனை சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பது குறித்து சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகி யோரை சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூர மாக தாக்கினர்.இதில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் சாத் தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. 9 பேர் மீதான குற்றப்பத்திரிகையை கடந்த 2020 செப்டம்பரில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்றுவரும், சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசா ரணைக்கு,மேலும் 4 மாத கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி மதுரை முதலா வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி முரளிசங்கர் முன்பு செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில், அலுவலக ரீதி யான ஒரு முக்கிய சாட்சி உள்பட எங்கள் தரப்பில் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க வேண்டியதுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் மேலும் எத்தனை சாட்சிகளை விசா ரிக்க வேண்டும். எவ்வளவு அவகாசம் தேவை என்பது குறித்து எழுத்து பூர்வமாக, சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணை யை ஜூன் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத் தார்.